விஜயகாந்தை நேரில் சந்தித்து இடைத்தேர்தலுக்கு ஆதரவுக் கேட்ட அதிமுக அமைச்சர்கள் 

 

விஜயகாந்தை நேரில் சந்தித்து இடைத்தேர்தலுக்கு ஆதரவுக் கேட்ட அதிமுக அமைச்சர்கள் 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களை தமிழக அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் நேரில் சந்தித்து இடைத் தேர்தலுக்கு ஆதரவு கேட்டனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களை தமிழக அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் நேரில் சந்தித்து இடைத் தேர்தலுக்கு ஆதரவு கேட்டனர்.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த்  இல்லத்தில் அதிமுக அமைச்சர்கள் ஜெயகுமார், தங்கமணி, திண்டுக்கல் ஸ்ரீநிவாசன் ஆகியோர் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பில் தே.மு தி.க சார்பில் கழக தலைவர் கேப்டன் விஜயகாந்த், கழக பொருளாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த், விஜய் பிரபாகரன் , கழக துணை செயளாலர் பார்த்தசாரதி ஆகியோர் பங்கேற்றனர்.

vijayakanth
 இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயகுமார், ‘நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு கோரியும் , ஆதரவுக்கு நன்றி கூறும் வகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது முதல்வர் பழனிசாமி, கேப்டன் உடன் தொலைபேசியில் தனது ஆதரவை கோரினர் ’ என தெரிவித்தார்.