விசிக மாவட்ட செயலாளர் மீது கொலைவெறி தாக்குதல்…9 பேர் தலைமறைவு!

 

விசிக மாவட்ட செயலாளர் மீது கொலைவெறி தாக்குதல்…9 பேர் தலைமறைவு!

காரிலிருந்து இறங்கிய மர்மநபர்கள் சிலர் தமிழருவியை பாட்டிலால் குத்தியதுடன் அரிவாளால் வெட்டினர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழருவி.  கும்பகோணத்தில் வசித்து வரும் இவர்  நேற்று இரவு கும்பகோணம் உப்புக்கார தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த காரிலிருந்து இறங்கிய மர்மநபர்கள் சிலர் தமிழருவியை பாட்டிலால் குத்தியதுடன் அரிவாளால் வெட்டினர்.

tt

இதைக்கண்ட தமிழருவியின் மகன் ஹரி கிருஷ்ணன் மற்றும் உறவினர் பிரகாஷ் கார்த்திக் ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டது.  இதை தொடர்ந்து மர்மக்கும்பல் அங்கிருந்து தப்பி சென்றனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட மூவரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

ttn

இதுகுறித்து கும்பகோணம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.  விசாரணையில்  பாத்திமாபுரம் மார்ட்டின் மகன் அலெக்ஸ் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய தென்னவன், விமல் உள்பட 9 பேரை தேடி வருகின்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின்  நிர்வாகி ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.