விசாரணையால் 2 ஆவது மாடியில் இருந்து குதித்த ரகுராஜ்!!!

 

விசாரணையால் 2 ஆவது மாடியில் இருந்து குதித்த ரகுராஜ்!!!

சென்னை திருவல்லிக்கேணியில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட ரகுராஜ் என்பவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். 

சென்னை திருவல்லிக்கேணியில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட ரகுராஜ் என்பவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். 

மண்ணடியில் ரூ.80 லட்சம் பணம் காணாமல் போனதாக புகார் எழுந்ததையடுத்து, கடந்த வாரம் ரூ.80 லட்சம் ஹவாலா பணத்துடன் ரகுராஜையும் அவரது கூட்டாளிகள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து சென்னை திருவல்லிக்கேணிக்கு இன்று விசாரணைக்காக அழைத்து செல்லப் பட்ட ரகுராஜ், விசாரணையில் இருந்து தப்பிப்பதற்காக 2 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.அவரைக் காப்பாற்றி திருவல்லிகேணியில் உள்ள மருத்துவ மனையில் அனுமதித்து சிகிச்சை கொடுக்கப்பட்டு வருவதாக தகவல்ககள் வெளியாகியுள்ளன.