வா தலைவா: அஜித்தை அரசியலுக்கு அழைக்கும் இயக்குநர் சுசீந்திரன்

 

வா தலைவா: அஜித்தை அரசியலுக்கு அழைக்கும் இயக்குநர் சுசீந்திரன்

அரசியலில் மாற்றத்தை உருவாக்க உங்களால் மட்டுமே முடியும் என்று நடிகர் அஜித் குமாருக்கு இயக்குநர் சுசீந்திரன் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை: அரசியலில் மாற்றத்தை உருவாக்க உங்களால் மட்டுமே முடியும் என்று நடிகர் அஜித் குமாருக்கு இயக்குநர் சுசீந்திரன் கடிதம் எழுதியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் ஒட்டுமொத்த தமிழகமுமே பரபரப்பாக இயங்கி வருகிறது. சினிமா துறையில் இருக்கும் சில பிரபலங்களும் அரசியலுக்குள் வந்துவிட்டனர். 

அதற்கிடையில் அஜித் ரசிகர்கள் மோடியின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லவேண்டும் என்று பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் சில மாதங்களுக்கு முன்னர் பேசியிருந்தார். அதற்கு பதிலாக அறிக்கை வெளியிட்ட அஜித், ‘எனக்கும் அரசியலுக்கு எந்தத் தொடர்பும் இல்லை’ என்று பதிலளித்திருந்தார்.

இந்நிலையில் இயக்குநர் சுசீந்திரன், அஜித் அரசியலுக்கு வரவேண்டும் என்று கடிதம் எழுதி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவருடைய பதிவில், ‘40 ஆண்டு கால திராவிட அரசியலில் மாற்றத்தை உருவாக்க உங்கள் ஒருவரால் மட்டுமே முடியும். தமிழக மக்களின் நலன் கருதி, உங்களை மக்கள் பணிக்கு அழைக்கிறேன். இதுதான் 100% சரியான தருணம். வா தலைவா, மாற்றத்தை உருவாக்கு.. உங்களுக்காகக் காத்திருக்கும் பலகோடி மக்களில் நானும் ஒருவன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ajith

சுசீந்திரன் பதிவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அஜித் ரசிகர்கள் #எங்களுக்கு அஜித்போதும்அரசியல்வேண்டாம் என்ற ஹேஷ்டேக் மூலம் பதிலடி கொடுத்து வருகின்றன.