“வாழ்க்கை ஓர் ஆசீர்வாதம்!”…நியூசிலாந்து டி20 தொடரைக் கைப்பற்றிய பிறகு விராட் கோலி பகிர்ந்த வைரல் புகைப்படம் – உள்ளே

 

“வாழ்க்கை ஓர் ஆசீர்வாதம்!”…நியூசிலாந்து டி20 தொடரைக் கைப்பற்றிய பிறகு விராட் கோலி பகிர்ந்த வைரல் புகைப்படம் – உள்ளே

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய பிறகு விராட் கோலி பகிர்ந்த புகைப்படம் வைரலாகி உள்ளது.

ஹாமில்டன்: நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய பிறகு விராட் கோலி பகிர்ந்த புகைப்படம் வைரலாகி உள்ளது.

நேற்று இந்தியாவுக்கு எதிராக நடந்த 3-வது டி20 போட்டியும் சமனில் முடிந்ததை தொடர்ந்து சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. ரோகித் ஷர்மாவின் கடைசி 2 அட்டகாச சிக்ஸர்களால் இந்திய அணி போட்டியை வென்றதோடு, டி20 தொடரையும் கைப்பற்றியுள்ளது. மேலும் இந்தியாவுக்கு எதிராக முதன்முறையாக சொந்த மண்ணில் டி20 தொடரை நியூசிலாந்து அணி இழந்துள்ளது. அந்நாட்டு மண்ணில் டி20 தொடரை வென்ற முதல் இந்திய அணி கேப்டனாக விராட் கோலி உருவெடுத்துள்ளார். இந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய பிறகு விராட் கோலி பகிர்ந்த புகைப்படம் வைரலாகி உள்ளது.

ஒரு ஆற்றின் ஓரமாக படிக்கட்டில் அமைதியாக நிழலில் அமர்ந்து இருப்பது போன்ற புகைப்படத்தை விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அதில் “வாழ்க்கை ஓர் ஆசீர்வாதம்!” என்று குறிப்பிட்டுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான வெற்றியை தொடர்ந்து, நியூசிலாந்து மண்ணில் டி20 தொடரையும் வென்றுள்ளதால் விராட் கோலி மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார். அதைத் தான் இவ்வாறு வெளிப்படுத்தி உள்ளார் என அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்படுகிறது.