வாழ்க்கையில் எதை இழக்கக் கூடாது?

 

வாழ்க்கையில் எதை இழக்கக் கூடாது?

நிறைய தடவை உங்க பெரிய பையன் போன் பண்ணினாராம். `ஸ்விட்ச்டு ஆஃப்’னே வந்துச்சாம்’’ அப்போது தான் அவருக்கு ஒரு மீட்டிங்குக்காக இரவு எட்டு மணிக்கு தன் மொபைல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்தது நினைவுக்கு வந்தது. அவர் தன் மனைவி படுத்திருந்த அறைக்குள் அவசரமாக நுழைந்தார். அந்தப் பெண்மணி ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள். அவர், மனைவியின்

நிறைய தடவை உங்க பெரிய பையன் போன் பண்ணினாராம். `ஸ்விட்ச்டு ஆஃப்’னே வந்துச்சாம்’’ அப்போது தான் அவருக்கு ஒரு மீட்டிங்குக்காக இரவு எட்டு மணிக்கு தன் மொபைல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்தது நினைவுக்கு வந்தது. அவர் தன் மனைவி படுத்திருந்த அறைக்குள் அவசரமாக நுழைந்தார். அந்தப் பெண்மணி ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள். அவர், மனைவியின் தலையை ஆதுரமாக வருடிக் கொடுத்தார். `சே… இவளை கவனிக்காமல் விட்டு விட்டோமே!’ என்கிற வருத்தம் எழுந்தது. அவர்களுக்கு திருமணமாகி 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.

husband and wife

குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்ந்திருந்த நாட்களை எல்லாம் நினைவுக்குக் கொண்டுவர முயன்றார். அவர் நினைவுக்கு வந்தது மிக மிகச் சொற்ப தினங்களே! தன் மனைவியின் பக்கத்தில் இப்படி நெருக்கமாக அமர்ந்தே வெகு நாள்கள் ஆகிவிட்டது என்பதை நினைத்ததும் அவருக்கு `திடுக்’கென்று இருந்தது. அறையை விட்டு வெளியே வந்தார். அடுத்த அறைக் கதவைத் திறந்து பார்த்தார். அவருடைய இரு மகன்களும் படுக்கையில் படுத்திருந்தார்கள். சத்தமில்லாமல் கதவை மூடினார். மாடியிலிருந்த தன் தனி அறைக்குப் போவதற்காகப் படிகளில் ஏறினார். ஐயா… சாப்பிட ஏதாவது வேணுமா?’’ பணியாள் கேட்டார். வேண்டாம்’’ என்று சொல்லி விட்டு அவர் தன் அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக் கொண்டார். 
உடையை மாற்றிக் கொண்டு கட்டிலில் அமர்ந்தார். `இவ்வளவு சம்பாதித்து என்ன பிரயோசனம்… நாம் யாருக்காக வாழ வேண்டும்… பிள்ளைகள், மனைவி இவர்களோடு கூட நேரத்தைச் செலவழிக்க முடியாமல் அப்படி என்ன வேலை…’ என்னென்னவோ யோசனை வந்தது. கடைசியில் அவர் ஒரு முடிவுக்கு வந்தார். `இன்றுதான் கடைசி. இன்றோடு பிசினஸிலிருந்து ஓய்வு பெற்று விட வேண்டும். இனிமேல் வாழ வேண்டும். எனக்காக, என் மனைவிக்காக, என் குடும்பத்துக்காக…’

man

அப்போது தான் கட்டிலுக்கு அருகிலிருந்த நாற்காலியில் யாரோ உட்கார்ந்திருப்பது அவருக்குத் தெரிந்தது. `கதவை தாழ்ப்பாள் போட்டு விட்டுத் தானே வந்தோம்..! இது யார்… எப்படி உள்ளே வந்தார்?’ “யார் நீங்க… எப்படி  உள்ளே வந்தீங்க?’’ என்று கேட்டார். அந்த உருவம் சொன்னது… “நான் மரண தேவதை. உன்னை அழைத்துச் செல்ல வந்திருக்கிறேன்.’’ அவர் திடுக்கிட்டுப் போனார். “ஐயா சாமி… நான் இப்போ தான் வாழணும்னு முடிவு செஞ்சிருக்கேன். இப்போ போய் என்னை கூட்டிட்டுப் போக வந்திருக்கீங்களே..! கொஞ்சம் அவகாசம் கொடுங்க!’’ – அவர் எவ்வளவோ பேசி, மன்றாடிப் பார்த்தார். தன் செல்வத்தை எல்லாம் கொடுப்பதாகச் சொல்லிப் பார்த்தார். மரண தேவதை அவருக்கு செவி சாய்க்க மறுத்தது. அங்கிருந்து நகராமல், அவரை அழைத்துச் செல்ல ஆணியடித்தது போல் அப்படியே உட்கார்ந்திருந்தது. ஒரே ஒரு மணி நேரம் மட்டும் அவகாசம் கொடுங்க ஐயா. என் மனைவி, குழந்தைகளுக்கு நான் செய்யவேண்டிய கடமைகள் இருக்கு. அதை முடிச்சிடுறேன். ரொம்ப நாள் பார்க்காம இருந்த என் நண்பர்கள், உறவினர்களை பார்த்துடுறேன்…’’ என்று கேட்டார். அதற்கும் மரண தேவதை ஒப்புக் கொள்ளவில்லை அவர் கெஞ்சி அழும் குரலில் கேட்டார்… “சரி… ஒரே ஒரு நிமிஷமாவது கொடுப்பீங்களா? உலகத்துக்கு நான் ஒரு குறிப்பு எழுதணும்…’’ மரண தேவதை ஒப்புக்கொண்டது. அவர் இப்படி எழுதினார். `உங்களுக்கான நேரத்தை சரியான வழியில் செலவழித்து விடுங்கள். என்னுடைய அத்தனை சொத்துகளை ஈடாகக் கொடுத்தாலும் கூட எனக்காக ஒரு மணி நேரத்தை என்னால் வாங்க முடியவில்லை. இது ஒரு பாடம். எனவே, உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் வீணடித்து விடாமல் அனுபவித்து வாழ்ந்து விடுங்கள்!’ அப்போது யாரோ கதவை பலமாகத் தட்டும் சத்தம் கேட்டது. அவர் திடுக்கிட்டு கண்விழித்தார். விடிந்து வெகுநேரமாகிவிட்டிருந்தது. அவர் எழுந்து போய்க் கதவைத் திறந்தார். பணியாள் தான் வெளியே நின்றுக் கொண்டிருந்தார். 

letter

“ஐயா… ரொம்ப நேரமா கதவைத் தட்டுறேங்க. நீங்க திறக்கலையா..? பயந்துட்டேன். அதான் கொஞ்சம் பலமாகத் தட்டிட்டேன்.’’ அவர் அவசரமாகத் திரும்பி தன் பெட்டுக்கு அருகேயிருக்கும் மேஜையைப் பார்த்தார். அங்கே அவர் எழுதிய குறிப்பு இல்லை. பேனாவும், எழுதப்படாத வெள்ளைத் தாளும் தான் இருந்தன. அந்த வெற்றுத் தாளில், தன்னுடைய எதிர்கால குடும்ப வாழ்க்கைக்காக எழுதத் தொடங்கினார். 
ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு லட்சியம் வேண்டும் தான்; அதை அடைய வேண்டியது அவசியம் தான். ஆனால், அதற்காக வாழ்க்கையை இழந்து விடக் கூடாது. காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. அதன் ஓட்டத்தோடு மனிதன் வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்துவிட வேண்டும் என்பதை உணர்த்தும் கதை இது. 

family

நேற்று என்பது நம்மை கடந்து போய் விட்டது. நாளை, இனி மேல் தான் வர வேண்டும். நமக்கிருப்பது இன்று மட்டும் தான். நாம் அதை வாழ்ந்து பார்ப்போம்!’ – வாழ்வின் யதார்த்தத்தை அழகாகச் சொல்லியிருக்கிறார் அன்னை தெரஸா.  நல்ல வேலை, அதிகாரத்துடன் கூடிய பதவி, பணம், புகழ்… எல்லாம் முக்கியம் தான். இவற்றை எல்லாம் விட வாழ்வது மிக மிக முக்கியம். ஏதோ ஒன்றைத் துரத்திக் கொண்டு, அதன் பின்னாலேயே காலமெல்லாம் ஓடுவார்கள் சிலர். அதை அடைந்தும் விடுவார்கள். ஆனால், வாழ்க்கையை ரீவைண்ட் பண்ணிப் பார்த்தால், அவர்கள் இழந்ததும், அனுபவிக்கத் தவறியதும் ஏராளமானதாக இருக்கும். அதனால், உங்கள் லட்சியங்களை நோக்கி ஓடினாலும், வாழ்க்கையை இழந்து விடாதீர்கள்.