வால்பாறையில் சுற்றுலா பயணிகளுக்கு தடை!

 

வால்பாறையில் சுற்றுலா பயணிகளுக்கு தடை!

vaalpaarai

தமிழகத்தில் தற்சமயம் பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகள் நடைப்பெற்று வருவதால் அடுத்த வாரம் முதல் விடுமுறை தினங்கள் மாணவர்களுக்கு துவங்க இருக்கிறது. கார்த்திகை மாதம் துவங்க இருப்பதால் சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், விடுமுறை தினங்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் வால்பாறைக்கு செல்வதற்கு சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை தடை விதித்திருக்கிறது.

vaalpaarai elephant

கோவை மாவட்டம் வால்பாறையில் திடீர் திடீர் என காட்டு யானைகள் நடமாட துவங்கியிருக்கின்றன. வால்பாறையில் தற்சமயம் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்திருப்பதால், வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு வனத்துறை தடை விதித்துள்ளது. மேலும், சின்னக்கல்லார், நீரார் அணை உள்ளிட்ட இடங்களுக்கும் பாதுகாப்பு காரணங்களினால் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். முன்னதாக அறிவிப்பு ஏதும் இல்லாத நிலையில், பல சுற்றுலா பயணிகள் வந்து, ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.