‘வாயை மூடிக்கிட்டு இருக்கியா’: மிராவிடம் எகிறிய சேரன்!

 

‘வாயை மூடிக்கிட்டு இருக்கியா’: மிராவிடம் எகிறிய சேரன்!

பிக் பாஸ் 3 யின் இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது

பிக்பாஸ் 3 தொடங்கி இன்றோடு ஒரு மாத காலம் ஆகிவிட்டது. வாரந்தோறும் ஒருவர் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் ஃபாத்திமா பாபு, வனிதா மற்றும் மோகன் வைத்யா ஆகியோர் வெளியேறியுள்ளனர். இந்த நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் லிஸ்டில் சரவணன், சேரன், அபிராமி, மீரா, கவின் மற்றும் சாக்ஷி ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர்.

அதையடுத்து இன்றைக்கான முதல் புரோமோவில் ஹவுஸ் மேட்ஸ் இரு வேறு கிராமங்களாகப் பிரிந்துள்ளனர். அதாவது பாம்புப்பட்டி மற்றும் கீரிப்பட்டி என்று இரு அணிகளாக உள்ளனர். தற்போது இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது.

மிர

அதில் வழக்கம் போல் மீரா வீட்டில் பிரச்சனையைச் செய்ய ஆரம்பித்துள்ளார். இந்த முறை இவர் நாட்டாமையாக உள்ள சேரனிடம் தான் சண்டை போடுகிறார். அந்த புரோமோவில், ‘மீரா எப்போதும் போல் பேச அதை பார்த்து கடுப்பான சேரன், ‘எம்மா கொஞ்சம் கத்தாம வாய்ய மூடிக்கிட்டு இருக்கியா’ என்று கேட்கிறார்.

இதை வழக்கம் போல் தவறாக புரிந்து கொண்ட மீரா, ‘இது fun மாறி தெரியல’ என்றார். உடனே சேரன் பொங்கியெழுந்து இனிமேல் என் பேச்சுக்கு வராதீங்க. விளையாட்டில் இது போன்று நடைபெறுவது சகஜமான ஒன்று தான். இதை கூட புரிந்து கொள்ளவில்லை என்றால் சுத்த waste’ என்று கோபமாகக் கத்துகிறார்.

முன்னதாக இதே போன்று முகன் மீராவிடம் கத்தும் சமயத்தில் சேரன் ‘இங்கே உனக்கு கத்துவதற்கு யாரும். உரிமை தரவில்லை என்று அவரை கண்டித்தார். ஆனால் தற்போது அதை அவரே மீறியது பேசும் பொருளாக மாறியுள்ளது. மேலும் நெட்டிசன்கள் அவரை சரமாரியாகக் கலாய்த்து வருகின்றனர்.