வாடகை கார் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் இலவசம் !
ஜெகன் மோகன் ரெட்டி, ஒய்.எஸ்.ஆர். வாகனமித்ரா திட்டம் கார் மற்றும் வாகன ஓட்டுநர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.
ஜெகன் மோகன் ரெட்டி, ஒய்.எஸ்.ஆர். வாகனமித்ரா திட்டம் கார் மற்றும் வாகன ஓட்டுநர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.
ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்ற பிறகு அதிரடி திட்டங்களை அமல்படுத்தி மக்களைக் கவர்ந்து வருகிறார். ஆனால் முதல்வராவதற்கு முன்பே மக்கள்படும் துயரங்களைக் கேட்டு அறிந்துகொண்ட ஜெகன்மோகன் ரெட்டி அதன் வெளிப்பாடாகவே சிறப்பு திட்டங்களை அறிவிக்கிறார் என்று சொல்லாம். குறிப்பாகப் பாதயாத்திரை சென்று வாடகை கார் மற்றும் ஆட்டோ ஓட்டும் ஓட்டுநர்களின் குறைகளைக் கேட்டு அறிந்து கொண்டார்.
இந்நிலையில் முதல்வராகியுள்ள ஜெகன் மோகன் ரெட்டி, ஒய்.எஸ்.ஆர். வாகனமித்ரா திட்டம் கார் மற்றும் வாகன ஓட்டுநர்களுக்கு அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் ஒவ்வொரு வருடமும் 10 ஆயிரம் ரூபாய் கார் மற்றும் ஆட்டோ வாடகைக்கு ஓட்டுபவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக சுமார் ஒரு லட்சத்து 73 ஆயிரம் பேருக்கு வங்கிக் கணக்கில் பத்தாயிரம் ரூபாய் செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு ஜெகன் மோகன் ரெட்டி காக்கி சட்டை அணிந்து ஆட்டோ ஓட்டுநர் போல் வந்தது குறிப்பிடத்தக்கது .