வாக்குப்பெட்டியை திருடிக் கொண்டு ஓடிய நபர்.. முட்புதரில் அசந்து உறங்கிய போது கைது !

 

வாக்குப்பெட்டியை திருடிக் கொண்டு ஓடிய நபர்.. முட்புதரில் அசந்து உறங்கிய போது கைது !

வாக்கு பெட்டிகளை வாக்கு எண்ணும் மையங்களுக்கு அதிகாரிகள் கொண்டு செல்ல முயன்ற போது, மூர்த்தி என்பவர்  பெரியமூளிப்பட்டி பகுதியிலிருந்த வாக்குப்பெட்டியை தூக்கிக் கொண்டு ஓடினார்.

ஊரக உள்ளாட்சித் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. அதே போல, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கறம்பக்குடி, குன்னாண்டார் கோயில், விராலி மலைப் பகுதிகளிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. புதுக்கோட்டையில் மாலை 4 மணியளவில் 71% சதவீதம் வாக்குப்பதிவு ஆனது. வாக்குப்பதிவு முடியும் நேரமான 5 மணியளவில் புதுக்கோட்டையின் அனைத்து பகுதிகளிலும் வாக்கு நிறைவடைந்து வாக்குப்பெட்டிகளுக்கு சீல் வைக்கும் பணி தொடங்கியது. 

tttn

அதன் பின்னர், வாக்கு பெட்டிகளை வாக்கு எண்ணும் மையங்களுக்கு அதிகாரிகள் கொண்டு செல்ல முயன்ற போது, மூர்த்தி என்பவர்  பெரியமூளிப்பட்டி பகுதியிலிருந்த வாக்குப்பெட்டியை தூக்கிக் கொண்டு ஓடினார். இதனால், அதிர்ச்சி அடைந்த அதிகாரிகளும் காவல்துறையினரும் அவரை விரட்டிக் கொண்டு சென்றுள்ளனர். வாக்குப்பெட்டியை தூக்கிச் சென்ற மூர்த்தி போதையில் இருந்ததால் அங்கிருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த முட்புதரில் அந்த பெட்டியை போட்டு விட்டு அங்கேயே உறங்கியுள்ளார். 

ttn

மூர்த்தியைத் தேடிச் சென்ற அதிகாரிகள் அவர் முட்புதரில் உறங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து, அவரை கைது செய்தனர். மேலும், அங்கிருந்த வாக்குப்பெட்டியையும் கொண்டு வந்து தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார், மேற்கொண்ட விசாரணையில் அப்பகுதியில் போட்டியிட்ட வேட்பாளருக்கு ஆதரவாக அதனை எடுத்துச் சென்றுள்ளார் என்று தெரிய வந்துள்ளது.