வாகன ஓட்டியின் மண்டையை உடைத்த டிராபிக் போலீஸ்.. மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

 

வாகன ஓட்டியின் மண்டையை உடைத்த டிராபிக் போலீஸ்.. மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

கடந்த 18 ஆம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியே வந்த சுரேந்தர்(19) என்னும் இளைஞர் ஹெல்மெட் அணியாமல் வந்தார்.

சென்னை ஓட்டேரி அருகே உள்ள புளியந்தோப்பு காவல் சிறப்பு  உதவி ஆய்வாளர் ரமேஷ் கடந்த 18 ஆம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியே வந்த சுரேந்தர்(19) என்னும் இளைஞர் ஹெல்மெட் அணியாமல் வந்தார். அதனால் அவரை மடக்கிப் பிடித்த ரமேஷ் அபராதம் செலுத்தும் படி சுரேந்தரிடம் கூறியதில் காவலர் ரமேஷுக்கும் சுரேந்தருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அது சற்று நேரத்தில் கைகலப்பாக மாறியதில், ரமேஷ் சுரேந்தரை கட்டையால் அடித்ததாகக் கூறப்படுகிறது. 

ttn

அதனால் சுரேந்தரின் தலையில் ரத்தம் வடிந்ததைக் கண்டு ஆத்திரமடைந்த பொதுமக்கள், அதற்குக் காரணமான ரமேஷை தாக்க முயன்றனர். தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற  ஓட்டேரி இன்ஸ்பெக்டர் அந்த கூட்டத்தைக் கலைத்துவிட்டு சுரேந்தரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, காவலர் ரமேஷை அங்கிருந்து அழைத்துச் சென்றார்.

ttn

இதனையடுத்து தாக்கப்பட்ட இளைஞர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், பத்திரிகையில் வெளியான செய்தியை அடிப்படையாகக் கொண்டு மாநில உரிமை ஆணையம் சென்னை போக்குவரத்து கூடுதல் உதவி ஆணையர் அருண் மற்றும் டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், இந்த சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து இரண்டு வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.