வாகனத்தில் வன்கொடுமை வழக்கு: நடிகர் திலீப்பை விடுவிக்க முடியாது-நீதிமன்றம் நெத்தியடி
கொச்சி: நடிகை தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயரிலிருந்து தன்னை நீக்குமாறு நடிகர் திலீப் தாக்கல் செய்த மனுவை கூடுதல் சிறப்பு அமர்வு நீதிமன்றம் சனிக்கிழமை தள்ளுபடி செய்தது.
கொச்சி: நடிகை தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயரிலிருந்து தன்னை நீக்குமாறு நடிகர் திலீப் தாக்கல் செய்த மனுவை கூடுதல் சிறப்பு அமர்வு நீதிமன்றம் சனிக்கிழமை தள்ளுபடி செய்தது.
தன்னை இந்த பாலியல் வன்கொடுமை வழக்கிலிருந்து விடுவிக்கவேண்டி புதன்கிழமை திலீப் சொன்ன கருத்துக்களையும் ஆலோசனையையும் கோர்ட் 1 மணிநேரத்துக்கும் மேலாக கேட்டது .அதற்கு பிறகு அரசு தரப்பு இந்த வழக்கிலிருந்து திலீப்பை விடுவிக்க கூடாது எனவும் ,அவருக்கெதிராக ஆதாரங்கள் வலுவாக உள்ளதெனவும் முன்கூட்டியே விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்ததால் கோர்ட் அவரை விடுவிக்க முடியாது எனசனிக்கிழமை கூறி விட்டது
மேலும் திலீப் தரப்பு மேல் கோர்ட்டில் மனுசெய்ய 10நாள் அவகாசம் கேட்டுள்ளது .ஜனவரி 6 ன் தேதி இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் ஆஜராக கோர்ட் உத்தரவிட்டுள்ளது .சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி வழக்கை ஆறு மாதங்களுக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என கோர்ட் தெரிவித்துள்ளது.