வழக்கம்போல் வம்பிழுத்த கஸ்தூரி: மூக்கை உடைத்த பிரபல இயக்குநர்!?

 

வழக்கம்போல்  வம்பிழுத்த கஸ்தூரி: மூக்கை உடைத்த பிரபல இயக்குநர்!?

இயக்குநர் கரு. பழனியப்பன் தேர்தல் பிரச்சாரம் செய்வது தொடர்பாக எழுந்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை: இயக்குநர் கரு. பழனியப்பன் தேர்தல் பிரச்சாரம் செய்வது தொடர்பாக எழுந்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ளார்.

 மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு 

karupalaniyappan

 

இயக்குநர் கரு. பழனியப்பன் சினிமா மற்றும் அரசியல் சார்புடைய, நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.  சமீபமாகத் தொலைக்காட்சி மற்றும் விவாத நிகழ்ச்சிகளும் பங்கேற்று சமூகம் சார்ந்த கருத்துக்களைக் கூறி வருகிறார். தற்போது அவர்  மக்களவைத் தேர்தலையொட்டி, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவாகத் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.  

கடைசியில கரு பழனியப்பன் திமுகவா…
 

அந்த வரிசையில்  திருமாவளவன்,  சு.வெங்கடேசன், கனிமொழி ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த விவகாரம் தற்போது பேசும் பொருளாக மாறியுள்ளது. குறிப்பாக நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில், ‘கடைசியில கரு பழனியப்பன் திமுகவா…. நான் கூட சிவப்பு சிந்தனையாளர், சு.வெ க்கு மட்டும் பிரச்சாரம் பண்ணுறாருனு முதல்ல நினைச்சேன்… ஆனா எல்லாருக்கும் பண்ணுறாரு போல. குடும்ப டிவில ஒரு ப்ரோக்ராம் பார்சல் !’ என்று பதிவிட்டிருந்தார்.

ஒரு பொருட்டாக எடுத்து கொள்ள கூடாது

karupalaniyapan

இந்நிலையில் தன் மீதான விமர்சனம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், எல்லாவற்றையும் நான் கவனித்துக்கொண்டு தான் இருக்கிறேன். எந்த பணி செய்தாலும் அதற்கு எதிர்மறையான கருத்துக்கள் வரத்தான் செய்யும். எதிர் கருத்துக்கள் வராமல் செய்ய எந்த வேலையும் இங்கு இல்லை. அப்படியே வரக்கூடாது  என்று நினைத்தால் சும்மா தான் இருக்க வேண்டும். அதனால் இதையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்து கொள்ள கூடாது’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.

இதையும் வாசிக்க: பக்தர்களின் செருப்பை துடைத்து, ஓட்டு போட வேண்டாம் என்று கேட்ட பெண்: திருச்சியில் பரபரப்பு!