வளையல், பொட்டு, கம்மல்…. இதெல்லாம் எதனால பெண்கள் அணிகிறார்கள் தெரியுமா? ஆரோக்கிய ரகசியங்கள்!

 

வளையல், பொட்டு, கம்மல்…. இதெல்லாம் எதனால பெண்கள் அணிகிறார்கள் தெரியுமா? ஆரோக்கிய ரகசியங்கள்!

நாம மட்டும் ஏன் பெண்ணாகப் பிறந்தோம்…. இத்தனைப் பெரிய முடிவை வைத்துக் கொண்டு தலைக்கு குளித்து, பொட்டு வைத்து… ஏதேனும் விசேஷம் என்று கிளம்பினால் கூட வளையல், கம்மல் என்று அரை மணி நேரம் ஆகிறது என்று சலித்துக் கொள்ளும் ரகமா நீங்கள்… அப்படி பெண்கள் வைத்துக் கொள்ளும் ஒவ்வொரு பொருளுக்குப் பின்னாலும் அறிவியல் ரீதியாக உடலுக்கு பலம் தரும் விஷயம் அடங்கியிருப்பது தெரியுமா உங்களுக்கு? ஒவ்வொரு பொருளுக்குப் பின்னாலும் ஒளிந்திருக்கும் ஆரோக்கியத்தின் ரகசியத்தைத் தெரிந்துக் கொள்ளுங்கள்!

நாம மட்டும் ஏன் பெண்ணாகப் பிறந்தோம்…. இத்தனைப் பெரிய முடிவை வைத்துக் கொண்டு தலைக்கு குளித்து, பொட்டு வைத்து… ஏதேனும் விசேஷம் என்று கிளம்பினால் கூட வளையல், கம்மல் என்று அரை மணி நேரம் ஆகிறது என்று சலித்துக் கொள்ளும் ரகமா நீங்கள்… அப்படி பெண்கள் வைத்துக் கொள்ளும் ஒவ்வொரு பொருளுக்குப் பின்னாலும் அறிவியல் ரீதியாக உடலுக்கு பலம் தரும் விஷயம் அடங்கியிருப்பது தெரியுமா உங்களுக்கு? ஒவ்வொரு பொருளுக்குப் பின்னாலும் ஒளிந்திருக்கும் ஆரோக்கியத்தின் ரகசியத்தைத் தெரிந்துக் கொள்ளுங்கள்!

women

தொடர்ச்சியாக பொட்டு வைத்துக் கொள்ளும் பெண்களை அவ்வளவு சீக்கிரம் மெஸ்மரிசம் செய்ய முடியாது.  தோடு அணிவதால் மூளையின் செயல் திறன் அதிகரிக்கும்.  கண்பார்வை திறன் கூடும். நெற்றிச்சுட்டி அணிவதால் தலைவலி, சைனஸ்  போன்ற பிரச்சனைகள் எட்டியே பார்க்காது. கைகளில் ப்ரேசிலட், வாட்ச், காப்பு, மோதிரம் போன்றவைகளை அணிவதால் பாலுறுப்புகள் தூண்டப்படும்.  அதனால் தான் திருமணத்தின் போது மறக்காமல் மோதிரம், காப்பு எல்லாம் அணிவிக்கிறார்கள். குழந்தைப் பேறுவிற்கும் மோதிரத்திற்கும் கூட சம்பந்தம் உண்டு. கழுத்தில் செயின், நெக்லஸ் போன்றவைகளை அணியும் போது உடலுக்கும் தலைக்கும் இடையே உள்ள சக்தி ஓட்டம் சீராகும். கையில் வங்கியை இறுக்கமாக அல்லது கயிறுகள் அணியும் பொது உடலில் ரத்த ஓட்டம் சீராகி பதற்றம் படபடப்பு, பயம் குறைகிறது.  கைகளில் வளையல்களை அணிவதால் அந்த பகுதியின் புள்ளிகளை அழுத்துவதன் மூலம் வெள்ளையணு உற்பத்தி உடலில் அதிகரிக்கிறது முக்கியமான ஹார்மோன்கள் சுரப்பும் ரெகுலேட் செய்யபடுகிறது. இதன் மூலம் தாய்க்கும் சேய்க்கும் நோய் எதிர்ப்பாற்றல் கூடும். இடுப்பில் ஒட்டியாணம் அணியும்போது இடுப்பு பகுதியின் சக்தி ஓட்டம் நன்றாக தூண்டப்பட்டு ஆரோக்கியம் கூடும் வயிற்று பகுதிகள் வலுவடையும். மூக்குத்தி அணிவதால் மூக்கில் இருக்கும் சில புள்ளிகளுக்கும் பெருங்குடல் மற்றும் சிறுகுடலுக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. அந்த புள்ளிகள் தூண்டப்படும்போது அது சமந்தமான நோய்கள் குணமாகும்.  கால்களில் கொலுசு அணிவதால் கல்லீரல், பித்தப்பை, சிறுநீரகம், சிறுநீர்ப்பை, வயிறு போன்ற மிக முக்கிய உறுப்புகளின் செயல் திறனை தூண்டிவிடும் அற்புதமான அணிகலன் கொலுசு. கர்பப்பை இறக்க பிரச்சனையை தடிமனான கொலுசு அணிவதன் மூலம் தீர்க்கலாம். கால் விரல்களில் மெட்டி அணிவதால் கர்ப்பப்பையை பலப்படுகிறது.