‘வளமான சமுதாயத்தை உருவாக்கிடுவோம்’ – மரக்கன்றுகள் நடும் விழாவில் ஸ்டாலின் பேச்சு

 

‘வளமான சமுதாயத்தை உருவாக்கிடுவோம்’ – மரக்கன்றுகள் நடும் விழாவில் ஸ்டாலின் பேச்சு

கொளத்தூர் தொகுதியில் 1,000 மரக்கன்றுகள் நடும் பணியை திமுக தலைவர் ஸ்டாலின் துவக்கி வைத்துள்ளார்.

சென்னை: கொளத்தூர் தொகுதியில் 1,000 மரக்கன்றுகள் நடும் பணியை திமுக தலைவர் ஸ்டாலின் துவக்கி வைத்துள்ளார்.

இயற்கை பேரிடரால் மரங்கள் குறைந்து வருவதாகவும், அதை அதிகப்படுத்தும் நோக்கத்தில் 1000 மரக்கன்றுகள் நடுவதற்கான துவக்க விழா இன்று மாலை கொளத்தூரில் நடைபெறும் என்றும் திமுக அறிவித்திருந்தது.

அதனடிப்படையில், இன்று மாலை ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் கொளத்தூரில் மரக்கன்றுகள் நடுவதற்கான தொடக்க விழா நடைபெற்றது. அந்த விழாவிற்கு தலைமையேற்ற ஸ்டாலின், “அழியாத செல்வமாய் தலைமுறைகள் காக்கும் மரக்கன்று நடும் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வளமான சமுதாயத்தை உருவாக்கிடுவோம்” என தன் உரையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அந்த நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர்.