வறுமையை பயன்படுத்தி சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவர்: அதிர்ச்சி தரும் சம்பவம்!

 

வறுமையை பயன்படுத்தி சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவர்: அதிர்ச்சி தரும் சம்பவம்!

சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை 60வயது முதியவரை போலீசார் கைது செய்தனர்.

 கர்நாடகா:  சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை 60வயது முதியவரை போலீசார் கைது செய்தனர்.

டீ  கடையில் பணி  சேர்ந்த சிறுமி 

abuse

கர்நாடக மாநிலம் பல்லாரியை சேர்ந்தவர்  சந்திரசேகர். இவர் பாஜகவில் பஞ்சாயத்து உறுப்பினராக உள்ளதோடு  அப்பகுதியில் டீ கடை ஒன்றையும் நடத்தி வந்துள்ளார் .

இதையடுத்து டீ கடையில் வேலை செய்ய பணியாள் தேடி கொண்டிருந்த சந்திரசேகர் கடைக்கு அப்பகுதியைச் சேர்ந்த 14வயது சிறுமி வந்துள்ளார்.அப்போது அந்த சிறுமியிடம் வேலைக்கு வருகிறாயா?அப்படி வந்தால் சம்பளம் தருவதாகக் கூறியுள்ளார். குடும்ப சூழல் காரணமாக அந்த சிறுமி கடைக்கு வேலைக்கு வந்துள்ளார். தினமும் 25 முதல் 50 ரூபாயை சம்பளமாக வழங்கியுள்ளார் சந்திரசேகர்.

பாலியல் வன்கொடுமை

harassment

இதையடுத்து ஒருநாள் வீட்டிலும் வேலை இருக்கிறது செய்தால் அதற்கான பணத்தைக் கொடுப்பதாக முதியவர் கூற சிறுமியும் பணிக்குச் சென்றுள்ளார். ஆனால் சிறுமியை வீட்டில் வைத்துப் பூட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் இது குறித்து வீட்டில் கூறினால் கொன்று விடுவேன் என்று மிரட்டியதுடன் 50ரூபாய் பணத்தையும் கொடுத்து அனுப்பியுள்ளார்.

 கர்ப்பமான சிறுமி

abuse

இது போன்று நான்கு மாதங்களாகச் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ய, சிறுமிக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல சிறுமி கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதை தொடர்ந்து சிறுமியிடம் அவரது தாய் விசாரிக்க, சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை விளக்கியுள்ளார். இந்த விவகாரம் குறித்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளிக்க அதன் அடிப்படையில் போலீசார் முதியவர் சந்திரசேகரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் வாசிக்க: ”பிரபு, சத்யராஜ் உன்னத் தடவுனதெல்லாம் மறந்துபோச்சா கஸ்தூரி?”… விளாசும் லதா எம்.ஜி.ஆர்…