வரும்18 ஆம் தேதி முதல் டாஸ்மாக் பார்கள் திறப்பு!

 

வரும்18 ஆம் தேதி முதல் டாஸ்மாக் பார்கள் திறப்பு!

வரும்18 ஆம் தேதி முதல் டாஸ்மாக் பார்கள் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரசை தடுக்க கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்த ஊரடங்கு தளர்வுகளுடன் தொடர்ந்து வருகிறது. இதையொட்டி மாநிலத்தில் மது விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டது. இதனால் சுமார் 5 மாதங்கள் ஹோட்டலில் செயல்பட்டுவந்த பார்கள் மூடப்பட்டிருந்தன. இதனிடையே கடந்த மே மாதம் முதல் டாஸ்மாக் கடைகள் விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இருப்பினும் அங்கு பார்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. டாஸ்மாக் கடைகள் தற்போது காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட்டு வருகிறது.

வரும்18 ஆம் தேதி முதல் டாஸ்மாக் பார்கள் திறப்பு!

இந்நிலையில் வரும்18 ஆம் தேதி முதல் டாஸ்மாக் பார்கள் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பார்களுக்கான உரிமத்தை புதுப்பிக்குமாறு, பார் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பார்களில் தனிமனித இடைவெளி, முதல் கட்டமாக குறைவான நபர்களுக்கு மட்டும் அனுமதி, முகக்கவசம் உள்ளிட்டவைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.