வரும் 10 ஆம் தேதி முதல் விடுப்பு எடுக்க போலீசுக்கு தடை: அதிர வைக்கும் காரணம்!

 

வரும் 10 ஆம் தேதி முதல் விடுப்பு எடுக்க போலீசுக்கு தடை: அதிர வைக்கும் காரணம்!

வரும் 10-ம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் யாரும் விடுப்பு எடுக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அயோத்தி நிலம் தொடர்பான  தீர்ப்பு வருவதையொட்டி   வரும் 10-ம் தேதி முதல் தமிழக காவல்துறையினர் விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

ayothi

அயோத்தி நிலம் தொடர்பான விசாரணை முழுவதும் நிறைவடைந்து உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியாகவுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட காவல்துறைக்கும், டி.ஜி.பி திரிபாதி உத்தரவின் பேரில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், சட்ட ஒழுங்கு பிரச்னையை கருத்தில் கொண்டு வரும் 10-ம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் யாரும் விடுப்பு எடுக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

edappadi

இது தொடர்பாகக் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில்  தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி  இதுகுறித்து ஆலோசனை நடத்தியதுடன், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது, தலைமைச் செயலாளர் சண்முகம், டிஜிபி திரிபாதி ஆகியோரும் உடனிருந்தது குறிப்பிடத்தக்கது.