வரும் செப்டம்பர் 1 முதல் மின்சார ரயில் சேவையில் மாற்றம்!

 

வரும் செப்டம்பர் 1 முதல் மின்சார ரயில் சேவையில் மாற்றம்!

காலை 11.45 மணி முதல் மாலை 3.15 வரை சுமார் 4 மணி நேரத்திற்குக் கடற்கரை முதல் தாம்பரம் இடையிலான 29 சேவை ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: எழும்பூர் முதல் கடற்கரை வரை செல்லும் மின்சார ரயில் சேவைகளில்  மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

train

சென்னை எழும்பூர் முதல் கடற்கரை வரை செல்லும் ரயில் தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் மின்சார ரயில் சேவைகளில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  அதன்படி காலை 11.45 மணி முதல் மாலை 3.15 வரை சுமார் 4 மணி நேரத்திற்குக் கடற்கரை முதல் தாம்பரம் இடையிலான 29 சேவை ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

train

இதேபோல் சென்னை முதல் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருமால்பூர் இடையிலான 15 ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் இதை ஈடுகட்டும்  வகையில்  14 சிறப்பு மின்சார ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.