வருமான வரித்துறையினர் சோதனை..”மாஸ்டர்” இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேச்சைக் கேட்க ஆவல்: யார் சொன்னது தெரியுமா?

 

வருமான வரித்துறையினர் சோதனை..”மாஸ்டர்”  இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேச்சைக் கேட்க ஆவல்: யார் சொன்னது தெரியுமா?

பிகில்  இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசிய பேச்சு அரசியல் கட்சி  பிரமுகர்களிடம் கருத்து கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. 

பொதுவாக பெரிய நடிகர்களின் படங்கள் என்றாலே இசைவெளியீட்டு விழாவும் மிகவும் பிரம்மாண்ட முறையில் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக ரஜினி, விஜய் போன்றோர் இசைவெளியீட்டு விழாவில் பேசும் பேச்சுக்கு என்று தனி மவுசு உருவாகியுள்ளது. அந்த வகையில் தான் விஜய்யின் பிகில்  இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசிய பேச்சு அரசியல் கட்சி  பிரமுகர்களிடம் கருத்து கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. 

tn

அப்படி இருக்க இந்த முறை விஜய் மாஸ்டர் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். அதே சமயம்  அவர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை,  மாஸ்டர் படப்பிடிப்பில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம், விஜய் ரசிகர்கள் மீது தடியடி என பல்வேறு சம்பவங்கள் அவரை சுற்றி அரங்கேறியுள்ளன.

ttn

அதனால் இந்தமுறை மாஸ்டர்  இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசுவதற்கான கன்டென்ட் கண்டிப்பாக ஸ்ட்ராங்காக இருக்கும். இதனால் அவரின்  ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ஆடை பட இயக்குநர் ரத்னகுமார், மாஸ்டர் படத்தின் இசைவெளியீட்டு விழாவுக்காக காத்திருக்கிறேன் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதேபோல் மலையாள நடிகர் அஜு வர்கீஸ், “மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சைக் கேட்க ஆவலுடன் காத்திருக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.  இதன்மூலம் ரசிகர்கள் மட்டுமில்லாது பிரபலங்களும் கூட விஜய் பேச்சுக்காக காத்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது.