வரிசையில் நின்று வாக்களித்த முதல்வர் பழனிசாமி
சேலம் எடப்பாடி சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில், வரிசையில் நின்று முதல்வர் பழனிசாமி வாக்களித்தார்.
சேலம்: சேலம் எடப்பாடியில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று முதல்வர் பழனிசாமி வாக்களித்தார்.
நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு (ஏப்ரல் 18 ) இன்று சரியாக காலை 7 மணிக்குத் தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கும் முன்பே ஏராளமான பொதுமக்கள் வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்கினைச் செலுத்தினர்.
அரசியல் பிரமுகர்கள் போல் நடிகர் அஜீத், விஜய், நடிகர் சூர்யா, கார்த்தி உட்பட நடிகர், நடிகைகளும் பலர் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
இதனிடையே சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டது.
Tamil Nadu: CM Edappadi K Palanisamy cast his vote at a polling station in Edappadi, Selam. #LokSabhaElections2019 pic.twitter.com/mnh6hBLwwx
— ANI (@ANI) April 18, 2019
இந்நிலையில் சேலம் எடப்பாடி சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில், முதல்வர் பழனிசாமி
வரிசையில் நின்று வாக்களித்தார். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் பலர் தங்கள் வாக்கினைச் செலுத்தி வருகின்றனர்.
இதை வாசிக்க: மக்களவை தேர்தல் 2019 Live Updates; பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு; மக்கள் அவதி!