வயிற்றில் சிசுவுடன் இருந்த காதலியை கொன்று எரித்த காதலன்: பதற வைக்கும் உண்மை சம்பவம்!?

 

வயிற்றில் சிசுவுடன் இருந்த காதலியை கொன்று எரித்த காதலன்: பதற வைக்கும் உண்மை  சம்பவம்!?

கர்ப்பிணியான காதலியை கொலை செய்த காதலன் அவரை தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

புதுச்சேரி: கர்ப்பிணியான காதலியை கொலை செய்த காதலன் அவரை தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

புதுச்சேரி அடுத்த ஆரோவில் கடந்த 30 ஆம் தேதி அங்குள்ள முந்திரிக்காட்டு பகுதியில் எரிந்த நிலையில் ஒரு பெண்ணின் உடல் போலீசாரால் கண்டெடுக்கப்பட்டன. முந்திரி காட்டுப்பகுதியில் கடந்த 30 ஆம் தேதி தீயில் எரிந்து கருகிய நிலையில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டாரா என ரீதியில் போலீசார் விசாரணையைத் தொடங்கினர். 

murder

இந்நிலையில்  விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை சேர்ந்த அப்பாதுரை என்பவர் தன் தங்கையை காணவில்லை என்று புகார் கொடுக்க, அவரிடம் எரிந்த  நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலத்தை  போலீசார் காண்பித்த போது அவர் அது தன் தங்கை  லட்சுமி  தான் என்று கதறி அழுதார். 

லட்சுமி குடும்ப வறுமை காரணமாக புதுச்சேரியில் ஒரு பாத்திரக்கடையில் வேலை செய்து வந்துள்ளார். அவரை கடந்த 30 ஆம் தேதி அருண்குமார் என்பவர் அழைத்துச் சென்றதாகத் தெரியவந்தது. அருண்குமாரின் செல்போன் எண்ணை  வைத்து அவரை பிடித்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. 

love

லட்சுமி வேலைசெய்து வந்த பாத்திர கடைக்கு சரக்கு ஏற்றிவரும் போது  லட்சுமிக்கும் அருண்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் காதலாக மாற இருவரும் 2 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். இதில் லட்சுமி கர்ப்பமாகியுள்ளார். இதனிடையே  லட்சுமியின் வீட்டில் இவர்கள் காதலுக்குச் சம்மதம் தெரிவித்துள்ளனர். ஆனால்  அருண்குமார் திருமணம் செய்து கொள்வதில் விருப்பமில்லாமல் இருந்து வந்துள்ளார். 

pregnancy

தான் கர்ப்பமாக இருப்பதால் சீக்கிரம் திருமணம் செய்து கொள்  என்று லட்சுமி வற்புறுத்தவே ஆத்திரமடைந்த அருண்குமார், அவரை கடந்த 30 ஆம் தேதி தனியாக அழைத்து, கருவை கலைக்குமாறு கூறியுள்ளார். இதில் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அருண் உருட்டுக் கட்டையால் லட்சுமியின் தலையில் அடித்து கொலை செய்துள்ளார். பின் கொலையை மறைக்க நண்பனின் உதவியுடன் சடலத்தை பைக்கில் உட்காரவைத்து முந்திரிக்காட்டுக்கு  கொண்டு சென்றுள்ளார். பின்னர் அங்கு பெட்ரோலை ஊற்றி எரித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. 

arrest

இதையடுத்து இந்த கொலைவழக்கில் ஈடுபட்ட அருண்குமார் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.