வயலில் வேலைப்பார்த்துக்கொண்டிருந்த பெண் அடித்துக்கொலை!

 

வயலில் வேலைப்பார்த்துக்கொண்டிருந்த பெண் அடித்துக்கொலை!

ராமநாதபுரத்தில் வயலில் வேலைப்பார்த்துக்கொண்டிருந்த பெண் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

எக்ககுடி கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத் காம்பிளி. இவர் ஏர்வாடி காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக பணிபுரிகிறார். இவரது தாயார் தெய்வானை. அவர்களது விவசாய நிலத்திற்கு சென்ற தெய்வானை அங்கு களைபறித்துக்கொண்டிருந்தார்.  காலை சென்ற தெய்வானை நீண்ட நேரமாக வீடு திரும்பாததால் பதற்றமடைந்த உறவினர்கள், தெய்வானையைத் தேடி வயலுக்குச் சென்றனர். வயலுக்கு அருகிலிருந்த புதர் ஒன்றில் உடலில் காயங்களொடு இறந்துகிடந்த தெய்வானைப் பார்த்த உறவினர்கள் அதிர்ச்சியில் மூழ்கினர். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த சத்திரக்குடி காவல்துறையினர் தெய்வானையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

கொலை

தெய்வானை முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா அல்லது நகைக்காக கொலை செய்யப்பட்டாரா என காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.