வன்னியர்களுக்கு பா.ஜ.க வலை… வீரப்பன் மகள் சிக்கினார்! 

 

வன்னியர்களுக்கு பா.ஜ.க வலை… வீரப்பன் மகள் சிக்கினார்! 

சந்தன கடத்தல் வீரப்பன் மகள் வித்யா ராணி பா.ஜ.க-வில் இணைந்தார். பாரதிய ஜனதா கட்சியில் வன்னியர்களுக்கு வலை விரிக்கப்பட்டு கட்சியில் இணைத்த வருவதால் பா.ம.க தொண்டர்கள் கவலையடைந்துள்ளனர்.

சந்தன கடத்தல் வீரப்பன் மகள் வித்யா ராணி பா.ஜ.க-வில் இணைந்தார். பாரதிய ஜனதா கட்சியில் வன்னியர்களுக்கு வலை விரிக்கப்பட்டு கட்சியில் இணைத்த வருவதால் பா.ம.க தொண்டர்கள் கவலையடைந்துள்ளனர்.

veerappan-daughter

சந்தன கடத்தல் வீரப்பன் மகள் இன்று பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்துள்ளார். கிருஷ்ணகிரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பா.ஜ.க நிர்வாகி முரளிதரராவ் முன்னிலையில் வித்யா ராணி பாரதிய ஜனதாவில் இணைந்துள்ளார். ஏற்கனவே வன்னியர் சங்கத் தலைவராக இருந்த ஜெ.குருவின் மகனை பாரதிய ஜனதாவில் சேர்க்க முயற்சிகள் நடந்து வருகிறது. சமீபத்தில் பொன் ராதாகிருஷ்ணனை சந்தித்து ஜெ.குருவின் மகன் பா.ஜ.க-வில்  இணைந்து விட்டதாகக் கூட செய்திகள் பரவி வருகின்றன. தற்போது வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த வித்யா ராணியை பாரதிய ஜனதா இழுத்திருப்பது பா.ம.க-வினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.