வன்கொடுமை செய்யும்போது கூச்சலிட்டதால் பெண்ணின் கழுத்தை அறுத்தோம்- குற்றவாளிகளின் வாக்குமூலம்!

 

வன்கொடுமை செய்யும்போது கூச்சலிட்டதால் பெண்ணின் கழுத்தை அறுத்தோம்- குற்றவாளிகளின் வாக்குமூலம்!

விருதுநகர் அருகே மக்காச்சோள காட்டில் இளம்பெண் ஒருவர் வன்கொடுமை செய்யப்பட்டு கொலைச்செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அருப்புக்கோட்டை அருகே உள்ள பரளச்சி ராணு சேதுபுரம் கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ராதா, நேற்று விவசாய நிலத்திற்கு சென்றுவிட்ட வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த உறவினர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் நேற்றி இரவு முழுவதும் மோப்ப நாய் உதவியுடன் ராதாவைதேடியுள்ளனர். அப்போது ராதா மக்காச்சோளக்காட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். பிரேத பரிசோதனை செய்ததில் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிவந்தனர். இந்நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் அதே ஊரைச் சேர்ந்த அழகர்சாமி என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். 

rape

அப்போது சோலையப்பன் என்பவருக்கும் ராதாவுக்கு பல நாட்களாக பழக்கம் இருந்ததாகவும், அவரே ராதாவை மக்காச்சோள காட்டுக்கு வர சொன்னார். இதையறிந்த நானும் எனது கூட்டாளிகளான நாகநாதன், முத்துமணி ஆகிய இருவரும் ராதாவை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தோம். அப்போது வலி தாங்காமல் ராதா கூச்சலிட்டதால் அவரது கழுத்தை அறுத்தோம் என அழகர்சாமி வாக்குமூலம் கொடுத்துள்ளார்.