வனக்காவலர்களுக்கு கொலை மிரட்டல்: திமுக எம்பி மீது வழக்குப்பதிவு!

 

வனக்காவலர்களுக்கு கொலை மிரட்டல்: திமுக எம்பி மீது வழக்குப்பதிவு!

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில்  சேலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் எஸ்.ஆர்.பார்த்திபன்

வனச்சரக அலுவலரை மிரட்டியதாகச் சேலம் எம்பி எஸ்.ஆர் பார்த்திபன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

nr parthiban

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில்  சேலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் எஸ்.ஆர்.பார்த்திபன். இந்நிலையில் வேடன்கரடு மலைப்பகுதிக்குக் கள தணிக்கைக்குச் சென்ற வனக்காவலர்களுக்கு கொலைமிரட்டல் விடுத்ததாகக்  கூறப்படுகிறது. இதையடுத்து  வனச்சரக அலுவலர் திருமுருகன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சேலம் எம்பி எஸ்.ஆர் பார்த்திபன் மற்றும் அவரது சகோதரர் உள்ளிட்ட 4 பேர் மீது சாலை அமைக்க மரங்களை வெட்டியது, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு உண்டாக்கியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

nr parthiban

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சேலம் எம்பி எஸ்.ஆர் பார்த்திபன், தனக்கு அவப்பெயர் உண்டாக்கவே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்றார்.