வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை…

 

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை…

சென்னையில் இன்று பருவமழை முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்திற்கு தலைமை வகித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு சில முக்கிய ஆலோசனைகள் வழங்கினார். 

வடகிழக்கு பருவமழையை கருத்தில் கொண்டு முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். 

சென்னையில் இன்று பருவமழை முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்திற்கு தலைமை வகித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு சில முக்கிய ஆலோசனைகள் வழங்கினார். 

அதில் குறிப்பாக ரேஷன் கடைகளில் தேவையான அளவு  பொருட்களை வைக்க அறிவறுத்தியுள்ளார்.பின்னர் பேரிடர் மீட்பு படையினர் எப்போதும்  தயார் நிலையில் இருக்க உத்திரவிட்டுள்ளார்.

வடகிழக்கு பருவமழைபாதிக்கப்பட்ட இடங்களுக்கு எடுத்து செல்லும்  உபகரணங்களுக்காக 38.52 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பின் தண்ணீர் தேங்கும் இடங்களில் அதை உடனடியாக வெளியேற்ற இயந்திரங்களை தயாராக வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

மருத்துவமனைகளில் மருந்துகளின் இருப்பு தேவையான அளவு மற்றும் மருத்துவ வசதிகள் அனைத்தும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இந்த நவடிகைகளால் முன்பெப்போதும் போல் இல்லாமல் இந்த முறை வெள்ளப்பெறுக்கு ஏற்படுவதை தடுக்கவும், அப்படியே ஏற்பட்டாலும் அதனை சமாளிக்க அரசால் முடியும் என்ற நம்பிக்கை பொது மக்களிடம் எழுந்துள்ளது.