வசிப்பது வாடகை வீட்டில்,தலைவனுக்காக லட்சங்களை வாரி இறைத்த ரஜினி ரசிகர்!?

 

வசிப்பது வாடகை வீட்டில்,தலைவனுக்காக லட்சங்களை வாரி இறைத்த ரஜினி ரசிகர்!?

திருச்சி ரஜினி மக்கள் மன்ற ரசிகர் ஒருவர் ரஜினியின் அப்பா, அம்மாவுக்குக் கட்டிய மணிமண்டபத்தை ரஜினியின் சகோதரர் சத்ய நாராயண ராவ் நேற்று திறந்து வைத்துள்ளார்.

சென்னை: திருச்சி ரஜினி மக்கள் மன்ற ரசிகர் ஒருவர் ரஜினியின் அப்பா, அம்மாவுக்குக் கட்டிய மணிமண்டபத்தை ரஜினியின் சகோதரர் சத்ய நாராயண ராவ் நேற்று திறந்து வைத்துள்ளார்.
 
திரைப்பட நடிகர்களுக்குக் கோயில் கட்டி வணங்குவதில் திருச்சி ரசிகர்களை அடிச்சிக் கொள்வதில் ஆளேயில்லை. கடந்த சிலவருடங்களுக்கு முன்பு,குஷ்புவுக்குத் திருச்சியில் உள்ள ரசிகர்கள் கோயில் கட்டியது பரபரப்பாக பேசப்பட்டது. அந்தவகையில் தற்போது  திருச்சி ரசிகர் ஸ்டாலின் புஷ்பராஜ் என்பர் ரஜினியின் பெற்றோருக்கு மணிமண்டபம் கட்டி அசத்தியுள்ளார்.

rajni

திருச்சியைச் சேர்ந்த ஸ்டாலின் புஷ்பராஜ் ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்துவருகிறார். இவருக்கு சின்ன வயதில் இருந்தே ரஜினிகாந்த்தைப் பிடிக்குமாம். ரஜினியின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், கடந்த 2011-ம் ஆண்டு ரஜினி உடல்நலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காகச் சிங்கப்பூர் சென்றபோது, அவர் பூரண குணமடையப் பலரும் பல வகையான வேண்டுதல்களைச் செய்தனர். அந்தவகையில் ரஜினி உடல்நிலை குணமடைந்தால், ரஜினியின் பெற்றோருக்கு மணிமண்டபம் கட்டுவதாக வேண்டினாராம்.

rajini

இதையடுத்து சூப்பர் ஸ்டார் பூரணக் குணமடைந்து மீண்டும் சினிமாவில் களைகட்டி வரும் நிலையில், அடுத்து அரசியல் பரபரப்பையும் உண்டாக்கத் தயாராகி உள்ளார். இந்நிலையில், தன்னுடைய வேண்டுதல் படி, திருச்சியில் உள்ள குமாரமங்கலம் கிராமத்தில் 1,850 சதுர அடி பரப்பளவில் ரஜினியின், தாய் சௌ.ராம்பாய் – தந்தை ரானோஜிராவ் ஆகியோருக்கு தன் சொந்த செலவில் மணிமண்டபம் கட்டியுள்ளார். இதில் ரஜினியின் பெற்றோரின் மார்பளவு வெண்கலச் சிலைகள், இரண்டரை அடி உயர சிவலிங்கம் ஆகியவை உள்ளன.

rajinikanth

இந்த மணிமண்டபத்தை ரஜினியின் மூத்த சகோதரர் சத்ய நாராயண ராவ் சமீபத்தில் திறந்து வைத்தார். இவ்விழாவில் ரஜினியின் உறவினர்கள், ஸ்டாலின் புஷ்பராஜ் குடும்பத்தினர், ரஜினி மக்கள் மன்ற கர்நாடக மாநிலத் தலைவர் சி.எஸ்.சந்திரகாந்த், மாநிலச் செயலாளர் எம்.பி.வெங்கடேஷ் மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்கள் கலந்துகொண்டனர்.

rajini

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினியின் அண்ணன் பேசியதாவது, ‘வருகின்ற நாடாளுமன்றத்தேர்தலில் ரஜினி யாருக்கும் ஆதரவு கொடுக்கவில்லை. நல்லவர்கள் யார் எனப் பொதுமக்கள்  பார்த்து ஓட்டுப் போட வேண்டும். மேலும் விரைவில் ரஜினி திருச்சி வருவார்’ என்று கூறினார்.

பல லட்ச ரூபாய் செலவு செய்து ரஜினியின் பெற்றோருக்கு மணிமண்டபம் கட்டியுள்ள ஸ்டாலின் புஷ்பராஜ், பல ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தல அஜித்தின் நேர்கொண்ட ‘பார்வை’க்கு தப்பிய புது போட்டோ!