வங்கி மோசடி வழக்கு: முன்னாள் அதிமுக எம்.பிக்கு 7 ஆண்டுகள் சிறை!

 

வங்கி மோசடி வழக்கு: முன்னாள் அதிமுக எம்.பிக்கு 7 ஆண்டுகள் சிறை!

வங்கி மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் எம்.பி. ராமச்சந்திரனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கண்ணம்மாள் கல்வி அறக்கட்டளையின் அறங்காவலரான அதிமுக முன்னாள் எம்.பி ராமச்சந்திரன், அதன் கீழ் இயங்கும் சக்தி மாரியம்மன் பொறியியல் கல்லூரியை விரிவாக்கம் செய்தவதற்காக சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 20 கோடி ரூபாய் கடன்பெற்றுள்ளார். இதற்காக வங்கி மேலாளர் தியாகராஜன் 2 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கொடுத்துள்ளார். 

எம்.பி. ராமச்சந்திரன்

இது தொடர்பாக 2015ம் ஆண்டில் பதிவு செய்த வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, முன்னாள் எம்.பி. ராமச்சந்திரனுக்கு 7 ஆண்டுகள் சிறைதண்டனையும் ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் அபராதமு, அவரது மகன் ராஜசேகருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் அபராதமும், வங்கி மேலாளருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் 13 கோடியே 10 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் கண்ணம்மாள் கல்வி அறக்கட்டளைக்கு 15 கோடியே 20 லட்சம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டது.