வங்கிக் கடன் வட்டி மற்றும் அபராத தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும்! பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்!

 

வங்கிக் கடன் வட்டி மற்றும் அபராத தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும்! பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்!

இந்தியா ஊரடங்கு உத்தரவை அடுத்து முடங்கியுள்ளது.  21 நாட்கள் அதாவது ஏப்ரல் 14 ஆம் தேதி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும். இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது

இந்தியா ஊரடங்கு உத்தரவை அடுத்து முடங்கியுள்ளது.  21 நாட்கள் அதாவது ஏப்ரல் 14 ஆம் தேதி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும். இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தினக்கூலியாளர்கள் அன்றாட உணவுக்கே திண்டாடிவரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி

இந்த நெருக்கடியான சூழலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அதில், “கொரோனாவை எதிர்கொள்ள ரூ.4 ஆயிரம் கோடி நிதி தேவை. மத்திய அரசின் வழிகாட்டுதல்படி கொரோனா பாதிப்பு மற்றும் சவால்களை எதிர்கொள்ள தமிழக அரசு தீவிர முயற்சி எடுத்துவருகிறது. வங்கிக் கடன் வட்டி மற்றும் அபராத தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும். சிறு, குறு, நடுத்தர தொழில் செய்வோர் மற்றும் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்” என கோரிக்கை விடுத்துள்ளார்.