வகுப்பு மாணவனுடன் ஓட்டம் பிடித்த 10 ஆம் வகுப்பு மாணவி! பேருந்து நிலையத்தில் சுற்றிவளைத்த போலீசார்!

 

வகுப்பு மாணவனுடன் ஓட்டம் பிடித்த 10 ஆம் வகுப்பு மாணவி! பேருந்து நிலையத்தில் சுற்றிவளைத்த போலீசார்!

அவரது பெற்றோர் பள்ளி, அதன் சுற்றுவட்டாரப் பகுதி என பல இடங்களில் தேடியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியில் ஒரு அரசு உயர்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் சம்பவத்தன்று வீட்டிலுள்ள இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு வெளியில் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் மாணவி  வீட்டிற்கு வராததால், அவரது பெற்றோர் பள்ளி, அதன் சுற்றுவட்டாரப் பகுதி என பல இடங்களில் தேடியுள்ளனர். இதையடுத்து இதுகுறித்து பெருமாநல்லூர் போலீசில் புகார் அளித்தனர்.

ttn

அப்போது அந்த மாணவி பள்ளிக்கும் போகவில்லை என தெரியவந்தது. இதனால் பள்ளி முடிந்ததும் அந்த மாணவியுடன் உடன் படிக்கும் மாணவிகளை போலீசார் போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.  இதுகுறித்து அறிந்த மற்ற மாணவிகளின் பெற்றோர் போலீஸ் ஸ்டேஷன் வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

ttn

இதுகுறித்த விசாரணையில்  மாணவியுடன் உடன் படிக்கும்   மாணவன் ஒருவனும் காணாமல் போனது தெரியவந்தது.இதனால் பள்ளி மாணவர்களை தீவிரமாக தேடியதில் அவர்கள் திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அதில், இருவரும் காதலிப்பதாகவும், நண்பரின் அறையில் மாணவனுடன் தங்கியிருந்ததும், ஊரைவிட்ட்டு ஓடிச்செல்ல முடிவெடுத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவரின் பெற்றோரையும் வரவழைத்த  போலீசார், மாணவர்களுக்கு அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.