‘லேட் நைட் பார்ட்டி…ஆண் நண்பர்களுடன் பழக்கம்’ : டிடி-யின் முன்னாள் கணவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்?!

 

‘லேட் நைட் பார்ட்டி…ஆண்  நண்பர்களுடன் பழக்கம்’ :  டிடி-யின் முன்னாள் கணவர் வெளியிட்ட  அதிர்ச்சி தகவல்?!

டிவி தொகுப்பாளினி டிடி-யை பிரிந்தது குறித்து அவரது முன்னாள் கணவர் ஸ்ரீகாந்த் மனம் திறந்துள்ளார். 

பிரபல டிவி தொகுப்பாளினியாக வலம்வருபவர் டிடி எனும் திவ்யதர்ஷினி. கடந்த 20 வருடங்களாக சின்னதிரையில் வலம்  வரும் டிடி  வெள்ளிதிரையிலும் நடித்து வருகிறார். இதுதவிர பல்வேறு மேடை நிகழ்ச்சியில், விருது வழங்கும் விழா என படுபிஸியாக சுற்றிக்கொண்டிருக்கும் இவர் இணையத்திலும் படுஆக்ட்டிவாக செயல்பட்டு வருகிறார்.

dd

இதனிடையே கடந்த 2014 ஆம் ஆண்டு டிடி தனது நீண்டகால நண்பரான  ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் கணவன் மனைவிக்குள் பரஸ்பர புரிதல் இல்லாததால் மனக்கசப்பு ஏற்பட்டது. அதேசமயம் டிடி  சினிமாவில் நடிப்பதற்குக் கணவர் குடும்பத்தில் எதிர்ப்பு கிளம்பியதால் கணவனை டிடி சில காலம் பிரிந்து வாழ்ந்து வந்ததோடு விவாகரத்தும் பெற்றார்.

dd

இந்நிலையில் டிடியுடன் விவாகரத்து குறித்து அவரது முன்னாள் கணவர் ஸ்ரீகாந்த் மனம் திறந்துள்ளார். இதுகுறித்து இணையத்தில் வெளியான செய்திகளில், ‘டிடி லேட் நைட் பார்ட்டிகளில் கலந்துகொண்டு வீட்டிற்கு வந்ததாகவும் அதை பலமுறை வேண்டாம் என்று கூறியும் அவர் தொடர்ந்து இதே செயலில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. அதேபோல் டிடி சினிமாவில் நடிப்பது ஸ்ரீகாந்த் குடும்பத்துக்கு பிடிக்கவில்லை என்றும் அவருக்கு ஆண் நண்பர்களின் பழக்கம் அதிகரித்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் தான் டிடி -யை விவாகரத்து செய்ததாக ஸ்ரீகாந்த் தனது நண்பர்களிடம் கூறி வேதனைப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால்  இதில் எந்தளவுக்கு உண்மை உள்ளது என்பது டிடி வாய் திறந்தால் மட்டுமே  தெரியவரும் என்று டிடி ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.