லேடீஸ் ஹாஸ்டல் சமையல்காரர் செய்த அதிர்ச்சி செயல்… அலறிய பெண்கள்!

 

லேடீஸ் ஹாஸ்டல் சமையல்காரர் செய்த அதிர்ச்சி செயல்… அலறிய பெண்கள்!

சென்னை காரப்பாக்கத்தில் உள்ள ஒரு பெண்கள் விடுதியில் குளியலறைக்குள் கேமராவுடன் நுழைந்த சமையல்காரரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் ஐ.டி நிறுவனங்கள் நிறைந்த பழைய மகாபலிபுரம் சாலையில் காரப்பாக்கத்தில் ஒரு லேடீஸ் ஹாஸ்டல் செயல்பட்டு வருகிறது. இங்கு மூன்று மாதங்களுக்கு முன்பு சமையல்காரராக வேலைக்குச் சேர்ந்துள்ளார் ஆந்திராவைச் சேர்ந்த வெங்கட பிரசாத்.

சென்னை காரப்பாக்கத்தில் உள்ள ஒரு பெண்கள் விடுதியில் குளியலறைக்குள் கேமராவுடன் நுழைந்த சமையல்காரரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் ஐ.டி நிறுவனங்கள் நிறைந்த பழைய மகாபலிபுரம் சாலையில் காரப்பாக்கத்தில் ஒரு லேடீஸ் ஹாஸ்டல் செயல்பட்டு வருகிறது. இங்கு மூன்று மாதங்களுக்கு முன்பு சமையல்காரராக வேலைக்குச் சேர்ந்துள்ளார் ஆந்திராவைச் சேர்ந்த வெங்கட பிரசாத். அவரது நடவடிக்கைகள் சரியில்லை என்று அவ்வப்போது பெண்கள் புகார் கூறிவந்துள்ளனர். இந்த நிலையில், விடுதியின் குளியல் அறை அருகே நீண்ட நேரம் வெங்கடபிரசாத் நின்றுள்ளார். அவரது செயல்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்தவே, அவரிடம் பெண்கள் விசாரித்துள்ளனர்.

venkada prasad

முன்னுக்குப் பின் முரணாக அவர் பேசவே அவர் மீது சந்தேகம் அதிகரித்துள்ளது. அவரை சோதனை செய்தபோது செல்போனை மறைவாக வைத்திருந்ததும் அதில் கேமரா ஆன் ஆகி இருந்ததும் தெரிந்தது. இதில் அதிர்ச்சியடைந்த பெண்கள் சத்தம்போடவே, நிர்வாகி வந்து விசாரித்து இது தொடர்பாக கண்ணகி நகர் போலீசில் புகார் செய்துள்ளார்.
போலீஸ் விசாரணையில் பெண்கள் குளிப்பதை மறைந்திருந்து வீடியோ எடுத்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதைத் தொடர்ந்து வெங்கட பிரசாத்தை கைது செய்த போலீசார் மொபைலை கைப்பற்றி ஆய்வுக்காக அனுப்பியுள்ளனர். இந்த சம்பவம் ஹாஸ்டலில் தங்கி வேலைக்குச் செல்லும் பெண்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.