லக்னோவில் 13 வயதுடைய சிறுமியின் முகத்தில் ஆசிட் வீச்சு!

 

லக்னோவில் 13 வயதுடைய சிறுமியின் முகத்தில் ஆசிட் வீச்சு!

லக்னோவில் 13 வயது சிறுமியின் முகத்தில் ஆசிட் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காசியாரி பகுதியை சேர்ந்த ப்ரிமா ஃபேஸி என்ற பெண் தனது வீட்டிற்கு வெளியே ஆசிட் பாட்டிலிருந்த பையை குப்பையில் தூக்கி எறிந்துள்ளார். அப்போது அந்த வழியாக நடந்து சென்ற 13 வயது சிறுமியின் முகத்தில் பை விழுந்துள்ளது. இதில் படுகாயமடைந்த அந்த சிறுமி சிகிச்சைக்காக பால்ராம்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அந்த வழியாக நடந்து சென்ற மேலும் 2 பெண்களும் இதில் பாதிக்கப்பட்டனர்.

acid

பாதிக்கப்பட்ட சிறுமியின் பெயர் ஆஷா சோங்கர் என்பது தெரியவந்தது. நகைகளை சுத்தம் செய்வதற்காகவே ஆசிட் பாட்டில் வைத்திருந்ததாகவும், அந்த சிறுமியின் மேல் திட்டமிட்டு ஆசிட் வீசவில்லை என்றும் ப்ரிமா போலீசாரிடம் தெரிவித்தார். ப்ரிமாவை கைது செய்த கைசார் பாக் காவல்துறையினர் சிறுமிக்கு அவருக்கும் ஏற்கனவே முன்பகை இருக்கிறதா என விசாரித்துவருகின்றனர்.