ரேஷன் கார்டுகளுக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்கப்படும்!

 

ரேஷன் கார்டுகளுக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்கப்படும்!

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24-ஆக அதிகரித்துள்ளது. சென்னையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக   பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 570 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இதன் காரணமாக தான் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மேலும் 52பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

tt

இதன்மூலம் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  1937 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.  கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24-ஆக அதிகரித்துள்ளது. சென்னையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக   பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 570 ஆக உயர்ந்துள்ளது. 

 


இதனிடையே மே மாதத்திற்கான விலையில்லா  ரேஷன் பொருட்களை வாங்க ஏதுவாக மே  4 ஆம் தேதி முதல் நியாய விலைக்கடைகளில் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மே 2 மற்றும் 5 ஆம் தேதிகளில் வீட்டிற்கே வந்து அதற்கான டோக்கன் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான 3 மாதங்களுக்கு கூடுதலாக அரிசி வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.