ரூ.299 விலையில் தினமும் 1.5 ஜி.பி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ்கால் வழங்கும் பி.எஸ்.என்.எல்

 

ரூ.299 விலையில் தினமும் 1.5 ஜி.பி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ்கால் வழங்கும் பி.எஸ்.என்.எல்

பி.எஸ்.என்.எல் நிறுவனம் ரூ.299 விலையில் புதிய பிராட்பேன்ட் திட்டத்தை அறிவித்துள்ளது.

டெல்லி: பி.எஸ்.என்.எல் நிறுவனம் ரூ.299 விலையில் புதிய பிராட்பேன்ட் திட்டத்தை அறிவித்துள்ளது.

பி.எஸ்.என்.எல் நிறுவனம் ரூ.299 விலையில் புதிய பிராட்பேன்ட் திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி பி.எஸ்.என்.எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு 45 ஜிபி டேட்டாவினை நொடிக்கு 8 எம்.பி (8Mbps) வேகத்தில் வழங்குகிறது. 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட புது சலுகையில் பயனர்கள் தினமும் 1.5 ஜி.பி. டேட்டா பயன்படுத்த முடியும். தினசரி டேட்டா நிறைவுற்றதும் டேட்டா வேகம் நொடிக்கு 1 எம்.பி (1Mbps) ஆக குறைக்கப்படும்.

பிராட்பேன்ட் மட்டுமின்றி அந்நிறுவனம் பி.எஸ்.என்.எல். நெட்வொர்க் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்குகிறது. எனினும் இந்த வசதி உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை வெறும் 24 மணி நேரத்திற்கு மட்டுமே வழங்குகிறது.

மற்ற நெட்வொர்க் எண்களுக்கு அழைப்புகளை மேற்கொள்வோருக்கு ரூ.300 மதிப்புள்ள இலவச அழைப்புகளை பி.எஸ்.என்.எல். வழங்குகிறது. இத்துடன் வார நாட்களில் தினமும் இரவு 10.30 மணி முதல் காலை 6.00 மணி வரை இலவச வாய்ஸ் கால்களும், ஞாயிற்றுகிழமைகளில் அனைத்து நெட்வொர்க்களுக்கும் இலவச வாய்ஸ் கால் வழங்குகிறது.

இதுமட்டுமின்றி இந்த திட்டத்தில் புதிய பயனர்களுக்கு மாதம் ரூ.50 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இந்த கேஷ்பேக் சலுகை ரீசார்ஜ் பேக் ஆக்டிவேட் செய்யப்பட்டதில் இருந்து மூன்று மாதங்கள் அல்லது 180 நாட்களுக்கு வழங்கப்படும் என தெரிகிறது.