ரூ.20 லட்சம் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்த பிரபல பாடகி!
Dec 9, 2019, 17:13 IST1575891799000
அனுமதியின்றி வெளியிட்டு விட்டதாகவும் அதனால்சிம்பொனி நிறுவனம் ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வழக்குப் பதிவு செய்தார்.
நடிகையும் பிரபல பாடகியுமான மகாநதி சோபனா கர்நாடக சங்கீதம் பாடுவதில் வல்லவர். இவர் பல பக்தி பாடல்களைப் பாடியுள்ளார். ஷோபனா சிம்பொனி நிறுவனம் மீது சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், அவரது பாடல்களை அவரின் அனுமதியின்றி வெளியிட்டு விட்டதாகவும் அதனால்சிம்பொனி நிறுவனம் ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வழக்குப் பதிவு செய்தார்.
அந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், பாடகி மகாநதி சோபனாவின் வழக்குக்கு சிம்பொனி நிறுவனம் பதிலளிக்கும் படி உத்தரவிட்டு, அந்நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.