ரிலீஸ்க்கு முன்பே கேரளாவில் புதிய சாதனை படைத்த என்.ஜி.கே

 

ரிலீஸ்க்கு முன்பே கேரளாவில் புதிய சாதனை படைத்த  என்.ஜி.கே

தமிழ் சினிமாவின்  முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் சூர்யா. கடந்த சில வருடங்களாக இவரின் படங்கள் சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை. கடைசியாக இவரது நடிப்பில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் படமும் ரசிகர்களிடம் போதிய வரவேற்பு இன்றி தோல்வியைத் தழுவியது

தமிழ் சினிமாவின்  முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் சூர்யா. கடந்த சில வருடங்களாக இவரின் படங்கள் சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை. கடைசியாக இவரது நடிப்பில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் படமும் ரசிகர்களிடம் போதிய வரவேற்பு இன்றி தோல்வியைத் தழுவியது. 

அதைத்தொடர்ந்து தன்னுடைய அடுத்த இன்னிங்க்ஸை கவனமாக வைக்கத் தொடங்கியுள்ளார். இவர் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள என்.ஜி.கே திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளனர். 

ngk

அரசியலை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் வரும் மே 31ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ngk

இந்த நிலையில் சூர்யாவுக்கு பெண்கள் ரசிகர்கள் ஏராளம். அதனால் என்ஜிகே படத்தைப் முதல் நாள், முதல் காட்சி பார்ப்பதற்காக கேரளாவில் உள்ள பெண் ரசிகைகளுக்குத் தனி ஷோ ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.  ‘வி1000 லௌவர்ஸ்’ என்ற பெண்கள் அமைப்பும், மலப்புரம் சூர்யா ரசிகர் மன்றத்துடன் இணைந்து ‘மார்ஸ்’ திரையரங்கில் பெண்களுக்கான சிறப்புக் காட்சியை ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. 

இவ்வாறு பெண்களுக்கான சிறப்புக் காட்சி ஒருங்கிணைக்கப்படுவது கேரளவில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.