ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் எஸ் பேங்க்…“உங்கள் பணம் பாதுகாப்பாக உள்ளது!” – நிதி அமைச்சர் அறிவிப்பு

 

ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் எஸ் பேங்க்…“உங்கள் பணம் பாதுகாப்பாக உள்ளது!” – நிதி அமைச்சர் அறிவிப்பு

நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் எஸ் பேங்க் வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாப்பாக இருப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

டெல்லி: நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் எஸ் பேங்க் வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாப்பாக இருப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பிரபல தனியார் வங்கியான எஸ் பேங்க் வாராக்கடன், மோசமான நிர்வாகம் உள்ளிட்ட காரணங்களால் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. கடந்தாண்டு சுமார் ரூ.1500 கோடி இழப்பை எஸ் பேங்க் சந்தித்தது. இதையடுத்து நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இந்த வங்கி நிர்வாகத்தை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் ரூ.50ஆயிரம் வரை மட்டுமே பணம் எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த வங்கியில் பணம் வைத்துள்ள வாடிக்கையாளர்கள் பதட்டத்துடன் காணப்படுகின்றனர்.

ttn

இந்நிலையில், வாடிக்கையாளர்கள் யாரும் அச்சமடைய வேண்டாம் என்றும்,  வாடிக்கையாளர்களின் பணத்திற்கும் அதற்கான வட்டிக்கும் எந்தவிதமான பாதிப்பும் இருக்காது என்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மருத்துவம், கல்வி, திருமணம், தவிர்க்க முடியாத அவசர தேவைகளுக்கு வங்கி மேலாளரின் அனுமதியுடன் 5 லட்சம் ரூபாய் வரை பணம் எடுத்துக் கொள்ளலாம் என எஸ் பேங்க் வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.