ராமதாசுக்கு  வெட்கம், சூடு, சொரணை இல்லை: முக ஸ்டாலின் காட்டம்

 

ராமதாசுக்கு  வெட்கம், சூடு, சொரணை இல்லை: முக ஸ்டாலின் காட்டம்

அதிமுகவுடன் கூட்டணி அமைத்த பாமக நிறுவனர் ராமதாஸை, திமுக தலைவர் முக ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார்.

சென்னை: அதிமுகவுடன் கூட்டணி அமைத்த பாமக நிறுவனர் ராமதாஸை, திமுக தலைவர் முக ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார்.

வேலூர் மாவட்டம்  ஆம்பூர் தொகுதிக்கு உட்பட்ட அகரம்சேரி ஊராட்சி சபை கூட்டத்தில் இன்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மக்களிடம் கருத்து கேட்டார்.  

பின்னர், சோலூர் வாக்குச்சாவடி முகவர்களிடையே பேசிய ஸ்டாலின்,  அதிமுகவின் கதை என்று புத்தகம் போட்டவர் ராமதாஸ்.  அன்று புத்தகம் போட்டு விமர்சித்த ராமதாஸ் இன்று கூட்டணி வைத்துள்ளார். அதிமுகவின் கதை புத்தகத்தில் ஜெயலலிதாவையும் கடுமையாக விமர்சித்த அந்த பெரிய மனிதர் இன்று அவர்கள் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு கையெழுத்து போடுகிறார்.

ராமதாசுக்கு  வெட்கம் இல்லை; சூடு,சொரணை இல்லை.   அதிமுக – பாமக ஏற்கனவே கூட்டணி வைத்து தோற்றுப்போனவர்கள்.  ராமதாசுக்கு நாட்டைப்பற்றி கவலை இல்லை.  பணத்தைப் பற்றிதான் கவலை என கடுமையாக விமர்சித்தார்.