ராதா ரவியின் சர்ச்சை பேச்சு:கண்டனம் தெரிவித்த நடிகர் சங்கம் 

 

ராதா ரவியின் சர்ச்சை பேச்சு:கண்டனம் தெரிவித்த நடிகர் சங்கம் 

நடிகர் ராதா ரவியின் சர்ச்சைக்குரிய பேச்சைக் குறித்து நடிகர் சங்கம் கடும் கண்டம் தெரிவித்துள்ளது. 

சென்னை: நடிகர் ராதா ரவியின் சர்ச்சைக்குரிய பேச்சைக் குறித்து நடிகர் சங்கம் கடும் கண்டம் தெரிவித்துள்ளது. 

நடிகை நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் கொலையுதிர் காலம். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது. அந்நிகழ்வில் நயன்தாரா குறித்து நடிகர் ராதாரவி சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் பேசியதாவது,’ நயன்தாரவை பற்றி வராதே செய்தியே இல்லை. நயன்தாரா பேயாகவும் நடிக்கிறார்.அதே சமயம் சீதையாகவும் நடிக்கிறார். பார்த்தவுடனே கும்பிடறவங்களும் நடிக்கிறார்கள், பார்த்த உடனே கூப்பிடுறவங்களும் நடிக்கிறார்கள்’ என்று ஆபாசமாகப் பேசினார்.

kolaiyuthir kalam

நடிகர் ராதா ரவியின் சர்ச்சை கருத்துக்கு திரையுலகை சார்ந்த பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில்,கொலையுதிர் காலம் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில், பெண்களை கொச்சைப்படுத்தும் விதமாக இரட்டை அர்த்தத்துடன் பேசியது வருத்தமளிக்கிறது. இதனை தென்னிந்திய நடிகர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. 

இந்த மேடையில் மட்டுமல்ல, பல காலங்களாக தங்களுடைய இணையதள நேர்காணலிலும், பொது மேடைகளிலும் திரைப்பட விழாக்களிலும் இதுபோல் இரட்டை அர்த்த வசனங்களையும், பெண்களை கொச்சைப்படுத்திப் பேசுவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறீர்கள். இது ஊடகங்களின் மூலம் உலகெங்கும் பரவி வருகிறது.

இது ஒட்டுமொத்த திரைத்துறைக்கும், மற்ற நடிகர்களுக்கும் அவமான சூழ்நிலையையும், மன உளைச்சலையும் ஏற்படுத்திக்கிறது என்பதை ஏன் தாங்கள் உணரவில்லை? திரைத்துறையில் தங்களது தந்தையாருக்குப் பின் தொடர்ச்சியாக ஐம்பது ஆண்டுக்கால நீண்ட அனுபவத்தைக் கொண்டிருக்கும் தாங்கள் அதனை நல்வழியில் பயன்படுத்தி இளைய தலைமுறைக்கு வழிகாட்டுதலாக இருக்க வேண்டும்.

ஆனால், இதுபோன்ற கொச்சையான கீழ்த்தரமான பேச்சுக்கள் உங்களுக்கு மேன்மை தராது. இனியும் இதுபோன்ற வக்கிரமான பேச்சுக்களைத் தவிர்ப்பீர்கள் என நம்புகிறோம். தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் தாங்கள் ஈடுபட்டாள் தொழில் ஒத்துழைப்பு தருவது பற்றி தீவிரமாக முடிவெடுக்கப்படும் என தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: தல அஜித்துக்கு பிரியாணி செய்து கொடுக்கணும்! இளம் நடிகையின் பேராசை!