ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் முருகனின் தந்தை புற்றுநோயால் உயிரிழப்பு!

 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் முருகனின் தந்தை புற்றுநோயால் உயிரிழப்பு!

னது தந்தைக்கு உடல்நலம் சரியில்லாததால் வீடியோ காலில் பேச அனுமதி தர வேண்டும் என்று முதல்வருக்கு நேற்று அவசர மனு அளித்திருந்தார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதாக முருகன், பேரறிவாளன், நந்தினி, ராபர்ட் பயஸ், சாந்தன், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனை பின்னர், ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. அவர்கள் கைது செய்யப்பட்டு 28 வருடங்களுக்கு மேல் ஆகும் நிலையில், இப்போது வரை அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை. இருப்பினும், தங்களை விடுதலை செய்ய வேண்டும் என அவர்கள் 7 பேரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

ttn

இதனிடையே கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்துவிட்டதால், பொதுமக்கள் சிறைக்கைதிகளை சந்தித்து பேச தடை விதிக்கப்பட்டது. மேலும், சிறைக்கைதிகள் அவர்களது உறவினர்களுடன் வீடியோ கால் மூலம் பேசிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் சிறையில் இருக்கும் முருகன், தனது தந்தைக்கு உடல்நலம் சரியில்லாததால் வீடியோ காலில் பேச அனுமதி தர வேண்டும் என்று முதல்வருக்கு நேற்று அவசர மனு அளித்திருந்தார். இந்நிலையில், புற்றுநோய் பாதிப்பால் இலங்கை, யாழ்பாணத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முருகன் தந்தை, சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.