ராஜஸ்தானில் பந்தல் சரிந்து விழுந்து 14 பேர் உயிரிழப்பு 

 

ராஜஸ்தானில் பந்தல் சரிந்து விழுந்து 14 பேர் உயிரிழப்பு 

ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பந்தல் சரிந்து விழுந்து 14 பேர் உயிரிழந்தனர். 

ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பந்தல் சரிந்து விழுந்து 14 பேர் உயிரிழந்தனர். 

பார்மர் மாவட்டத்தில் உள்ள ஜசோல் கிராமத்தில் இருக்கும் பள்ளி ஒன்றில் கதாகாலட்சேபம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக சிறப்பு மேடை அமைக்கப்பட்டிருந்தது. இதனை கண்டுகளிக்க ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்திருந்தனர். அவர்கள் அமர்வதற்காக இரும்பு உத்திரங்களை கொண்டு மிகப்பெரிய பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த பந்தல்கள் சரிந்து விழுந்து 14 பேர் உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மீட்பு படையினர் இந்த விபத்தில் பலியானோரின் பிரேதங்களை மீட்டனர், 20-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.