ராகுலே ஒரே தலைவர்! தூக்கில் தொங்க முயன்ற காங்கிரஸ் தொண்டர்!! 

 

ராகுலே ஒரே தலைவர்! தூக்கில் தொங்க முயன்ற காங்கிரஸ் தொண்டர்!! 

ராகுலுக்காக தொண்டர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ராகுலுக்காக தொண்டர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த 2017 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியினர் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றார். கடந்த மக்களவை தேர்தலில் ராகுல் தலைமையிலான காங்கிரஸ், பல்வேறு இடங்களில் படு தோல்வியடைந்தது. இதற்கு பொறுப்பேற்று ராகுல் கட்சி தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். பல்வேறு காங்கிரஸ் தலைவர்கள் முடிவை மாற்றும்படி கோரியும் ராகுல் அவரது முடிவில் உறுதியாக இருந்தார். நேற்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதல்வர்கள் ராகுல் காந்தியுடன் சந்திப்பில் ஈடுபட்டு தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும் என வலியுறுத்தினர் ஆனால் அதுவும் தோல்வியில் முடிந்தது. 

ராகுல் காந்தி தமது ராஜினாமா முடிவை கைவிட வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் மற்றும் ராகுல் வீட்டின் முன் சில நாட்களாக போராட்டம் நடைபெற்றுவருகிறது. ராகுல் ராஜினாமா முடிவை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லி காங்கிரஸ் அலுவலகம் முன்பு காங்கிரஸ் தொண்டர் ஒருவர் தூக்கில் தொங்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கையில் கயிற்றுடன் அங்கிருந்த மரத்தில் ஏறி திடீரென தூக்கில் தொங்க முயன்ற அந்த தொண்டரை காவல்துறையினர் மீட்டனர். ராஜினாமா முடிவை ராகுல் கைவிடாவிட்டால் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொள்வேன் என அந்த நபர் மிரட்டல்விடுத்துள்ளார்.