ரயில் மோதி சாக இருந்தவரை காப்பாற்றிய கான்ஸ்டபிள்-ரயில் மோதி சாவு
ரன்வீர் குர்ஜார் என்ற கான்ஸ்டபிள் இரவு 10:45 மணிக்கு கான்ஸ்டபிள் ராகுல் பவருடன் ரோந்து பணியில் இருந்தார், அப்போது ரயில் தடங்களை சரிபார்க்க ரன்வீர் சென்றபோது உள்ளூர் ரயில் பாதையில் ஒருவரை ஒரு ரயில் மோத இருப்பதை அவர் கண்டார். உடனே அவரை அந்த பக்கம் தள்ளி காப்பாற்றியுள்ளார்
பாந்த்ரா ரயில் நிலையத்தில் ரயில் மோதி சாக இருந்த ஒருவரின் உயிரைக் காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்புப் படை கான்ஸ்டபிள், வேகமாக வந்த அதே ரயில் மோதியதில் சனிக்கிழமை இறந்தார். இந்த சம்பவத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் அவர் தனது இரண்டாவது குழந்தைக்கு தந்தையானார்.
ரன்வீர் குர்ஜார் என்ற கான்ஸ்டபிள் இரவு 10:45 மணிக்கு கான்ஸ்டபிள் ராகுல் பவருடன் ரோந்து பணியில் இருந்தார், அப்போது ரயில் தடங்களை சரிபார்க்க ரன்வீர் சென்றபோது உள்ளூர் ரயில் பாதையில் ஒருவரை ஒரு ரயில் மோத இருப்பதை அவர் கண்டார். உடனே அவரை அந்த பக்கம் தள்ளி காப்பாற்றியபோது அவர் நிலை தடுமாறி தண்டவாளத்தில் விழுந்த போது ரயில் அவர் மீது மோதி அவர் இறந்தார்.
உத்தரகண்ட் மாநிலத்தின் பதாலி கிராமத்தைச் சேர்ந்த இறந்த ரன்வீருக்கு மனைவி, மூன்று வயது மகள், மற்றும் மூன்று நாள் ஆண் குழந்தை உள்ளனர்.