ரயில் நிலையத்தில் ரூ.7 ஆயிரத்திற்கு பெண் குழந்தை விற்க முயற்சி – இளம் தம்பதி கைது!

 

ரயில் நிலையத்தில்  ரூ.7 ஆயிரத்திற்கு பெண் குழந்தை விற்க முயற்சி – இளம் தம்பதி கைது!

தம்பதியினர் விற்க போவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான நல மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் புகார் எண்ணான  181 க்கு புகார் ஒன்றுவந்துள்ளது. அதில் திருவள்ளூர் அடுத்த புட்லூர் ரயில் நிலையத்தில் 3 மாத பெண் குழந்தையை 7 ஆயிரம் ரூபாய்க்கு இளம் தம்பதியினர் விற்க போவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ttn

புகாரின் அடிப்படையில் மையத்தின் நிர்வாகிகள்  7 பேர் புட்லூர் ரயில் நிலையத்திற்கு விரைந்தனர். அங்கு சென்று குழந்தையை விற்க முயன்ற இருவரையும் பிடித்து திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

ttn

இதை தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் ஹைதராபாத்தைச் சேர்ந்த லட்சுமி (19) மற்றும் பக்ருதின் (20) என்பது தெரியவந்தது. இவர்கள் சென்னை பாரிமுனையில் வசித்து வந்துள்ளனர். இதை தொடர்ந்து குழந்தை மற்றும் லட்சுமியை போலீசார் அருகில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர். மேலும்  இவர்கள் குழந்தையைக் கடத்தினார்களா? அல்லது பக்ருதின் லட்சுமியின் குழந்தையா? என்று தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.