ரயிலில் மேல் படுக்கையில் பயணம் செய்த பெண்: கீழே விழுந்து இறந்த பரிதாபம்!

 

ரயிலில் மேல் படுக்கையில் பயணம் செய்த பெண்: கீழே விழுந்து இறந்த பரிதாபம்!

மும்பையிலிருந்து பெங்களூரு சென்ற உதயன் எக்ஸ்பிரஸ் ரயிலில்  சரஸ்வதி பனிசால் என்ற 40 வயது பெண் பயணம் செய்துள்ளார்.

பெங்களூரு : ரயிலின் மேல் படுக்கையிலிருந்து பெண் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையிலிருந்து பெங்களூரு சென்ற உதயன் எக்ஸ்பிரஸ் ரயிலில்  சரஸ்வதி பனிசால் என்ற 40 வயது பெண் பயணம் செய்துள்ளார். அவருக்கு  ஏசி கோச்சில் மேல் படுக்கை ஒதுக்கப்பட்ட நிலையில் அதைப் பயன்படுத்திய அவர்,  பெங்களூருவை நெருங்கியது கீழே இறங்க முற்பட்டுள்ளார். இதில் கால் இடறி கீழே விழுந்த  சரஸ்வதி பனிசால் தலையில் பலமாக அடிபட்டுள்ளது. 

இதையடுத்து இதுகுறித்து ஒருவர் ரயில்வேத்துறை டிவிட்டரில் தகவல் தெரிவிக்க, உடனடியாக நடவடிக்கை எடுத்த ரயில்வே நிர்வாகம் சரஸ்வதிக்கு முதலுதவி அளித்தபின் மேல்சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே சரஸ்வதி பரிதாபமாக உயிரிழந்தார். 

இது குறித்து பேசிய மருத்துவர் ஸ்நேகலதா, ஆரம்பத்தில் சரஸ்வதி கேட்கும் கேள்விகளுக்குத் தெளிவாகப் பதிலளித்தார்.குறிப்பாக காவலர்களிடம் என் உடைமைகளைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார். ஆனால்  கொஞ்ச நேரத்தில் அவர் பேச்சு தடுமாறியது. அவர் நினைவிழக்கத் தொடங்கியதுடன்  கண்ணிமைக்கும் நேரத்தில் இறந்துவிட்டார்’ என்றார்.  ரயிலில் பயணம் செய்த சக பயணி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அங்கிருந்தவர்களைச் சோகத்தில் ஆழ்த்தியது.