ரஜினி ரசிகர்கள் எல்லாம் என் வயசு காரங்க… அவங்களால ஒன்னும் செய்யமுடியாது- நாஞ்சில் சம்பத்! 

 

ரஜினி ரசிகர்கள் எல்லாம் என் வயசு காரங்க… அவங்களால ஒன்னும் செய்யமுடியாது- நாஞ்சில் சம்பத்! 

ரஜினிகாந்த் இன்று தனது ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்களைச் சந்தித்து ஆலோசணை நடத்திவருகிறார். ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றிருக்கும் என கூறப்படுகிறது. 

ரஜினிகாந்த் இன்று தனது ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்களைச் சந்தித்து ஆலோசணை நடத்திவருகிறார். ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றிருக்கும் என கூறப்படுகிறது. 

Rajinikanth

இந்நிலையில் சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய  திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத், “கமலின் அரசியல் வருகை ஏற்கனவே தெரிந்துவிட்டது. ஏனெனில் மையம் மையத்தில் இருக்கிறது. 234 தொகுதிகளிலும் அவர்கள் கடைசேர முடியாது என்பதுதான் நிதர்சனமானது. ரஜினியின் அரசியல் வருகையினால் தமிழ்நாட்டில் எந்த ஒரு ரசாயன மாற்றமும் நிகழ்ந்து விடாது. ஏனெனில் ரஜினி ரசிகர்கள் என் வயதை தாண்டியவர்கள். அவர்களால் என்ன செய்ய முடியும்? ஒன்னும் பண்ண முடியாது. சேலத்துல இருந்து மேட்டூர் அணை தண்ணீர் இதுவரை வீணாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது என்று சொன்னால் இதுவரை ஏன் கொண்டுவரவில்லை?இப்போது தேர்தல் காலத்தில் இதனைச் செய்து இதுபோன்ற மத்தாப்பு கொளுத்துகிற வேலையைச் செய்து விடலாம் என்று அவர்கள் பார்க்கிறார்கள்” எனக் கூறினார்.