ரஜினி ரசிகர்களின் கைவண்ணத்தில் கண்கவர் ஓவியங்களுடன் ஒளிரும் அரசுப்பள்ளி!
மாணவர் சேர்க்கை குறித்து இருந்த நிலையில் ஆசிரியர்களின் முயற்சியினாலே இந்த 70 மாணவர்களின் எண்ணிக்கையும் வந்துள்ளது.
நெல்லை மேலப்பாளையம் குறிச்சியில் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் 70 மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். மாணவர் சேர்க்கை குறித்து இருந்த நிலையில் ஆசிரியர்களின் முயற்சியினாலே இந்த 70 மாணவர்களின் எண்ணிக்கையும் வந்துள்ளது.
இந்நிலையில் பள்ளியின் சேர்க்கையை அதிகரிக்கும் வகையிலும், படிக்கும் மாணவர்களை ஈர்க்கும் வகையிலும் ரஜினி ரசிகர்கள் சார்பில் பள்ளிக்கு வண்ணம் தீட்டிக் கொடுத்துள்ளனர். ரயில் பெட்டிகள், அரண்மனை சுற்றுச்சுவர்கள், கோயில் கோட்டை சுவர் என பல விதமாக வண்ணம் தீட்டப்பட்டுள்ளன. அதே போல் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஓவியங்களும் இங்கு வரையப்பட்டுள்ளன.
இதனால் அப்பகுதி மக்களும், பள்ளி சார்பிலும் ரஜினி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.