ரஜினி சொன்ன அதிசயம், ஒவ்வொன்றாக நடந்து கொண்டிருக்கிறது – முத்தரசன்!

 

ரஜினி சொன்ன அதிசயம், ஒவ்வொன்றாக நடந்து கொண்டிருக்கிறது – முத்தரசன்!

ரஜினி சொன்னது போல தமிழகத்தில் ஒவ்வொரு அதிசயமாக நடந்துகொண்டு இருக்கிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். 

ரஜினி சொன்னது போல தமிழகத்தில் ஒவ்வொரு அதிசயமாக நடந்துகொண்டு இருக்கிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். 

திருவள்ளூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  “முதலில் திருடர்கள் பிரியாணி சமைத்து தின்று விட்டு திருடும் அதிசயம் நடந்தது. அதன்பின் நகை கொள்ளையில் காவல் துறையினர் பங்கு போட்டு கொள்ளும் அதிசயம் நடந்தேறியது. இதையடுத்து ஐஐடி மாணவி தற்கொலை என்ற அதிசயம் அரங்கேறியது

நிர்மலா சீதாராமன்

ஜனநாயகபூர்வமாக உள்ளாட்சி தேர்தல் நடக்க வாய்ப்பில்லை; முதல்வர் பழனிசாமி எதை விரும்புகிறாரோ, அதனையே தேர்தல் ஆணையர் பழனிசாமி நிறைவேற்றுகிறார். நிர்மலா சீதாராமன் வெங்காயம் சாப்பிட மாட்டேன் என்கிறார், ஒரு வேளை வெங்காய வியாதி வந்திருக்கிறதோ. அமைச்சரின் பொறுப்பான பேச்சு ஏற்க தக்கது அல்ல. மத்திய அரசு அவசரமாக வெங்காயத்தை இறக்குமதி செய்து நியாய விலைக்கடைகளில் விநியோகிக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.